சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விரிவான முறையில் 2 அறிக்கைகள் மூலம் விளக்கம் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக திமுக அரசை விமர்சித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார்.
நேற்று ஒரு அறிக்கை விடுத்து திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று காலை இன்னொரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். நேற்று திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த அறிக்கையைத் தவிர்த்து வேறு எந்தப் பதவிவையும் அவர் போடவில்லை. இன்று முதல் அறிக்கையாக திமுக கண்டனம் வந்துள்ளது.
பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியின் அன்பையும் பெற்றவர். ஆனால் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி சேர்ந்ததைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு பாஜக வட்டாரத்தில் நெருக்கம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் கேட்ட சில விஷயங்களை பாஜகவால் செய்ய முடியாமல் போனதால் (அதிமுக எதிர்ப்பு காரணமாக) ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார். பிரதமரைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டா்களே என்று புழுங்கியுள்ளார்.

இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை போய் நேரில் பார்த்துப் பேசி விட்டு வந்தார். வெளியில் வந்தவர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பரும் இல்லை என்றும் அவர் சொல்லி விட்டுப் போக புகைய ஆரம்பித்து விட்டது. பாஜக தரப்பிலிருந்து உடனடியாக தொடர்பு கொண்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், எங்கேயும் போகாதீர்கள். பிரதமரைப் பார்க்கலாம், பொறுமையாக இருங்கள் என்று சொல்லப்பட ஓபிஎஸ்ஸும் பின்வாங்கினார்.
முதல்வரை சந்தித்தது குறித்து அரசியலாக்கக் கூடாது என்று அறிக்கை விட்டார். தனது ஆதரவாளர்களையும் கருத்து கூறாமல் அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்டார். இப்போது அவரும் அமைதியாகி விட்டார். ஆனால் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார். நேற்று அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார். இதைத் தவிர நேற்று வேறு எந்தப் பதிவையும் அவர் போடவில்லை. இன்று, சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்ஸிடம் காணப்படும் இந்த மாற்றம் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Short Story: பிடிவாதம்!
The Only Limits Are the Limits You Believe
வருமா ஒரு நாள்?
தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
{{comments.comment}}