சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விரிவான முறையில் 2 அறிக்கைகள் மூலம் விளக்கம் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக திமுக அரசை விமர்சித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார்.
நேற்று ஒரு அறிக்கை விடுத்து திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று காலை இன்னொரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். நேற்று திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த அறிக்கையைத் தவிர்த்து வேறு எந்தப் பதவிவையும் அவர் போடவில்லை. இன்று முதல் அறிக்கையாக திமுக கண்டனம் வந்துள்ளது.
பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியின் அன்பையும் பெற்றவர். ஆனால் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி சேர்ந்ததைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு பாஜக வட்டாரத்தில் நெருக்கம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் கேட்ட சில விஷயங்களை பாஜகவால் செய்ய முடியாமல் போனதால் (அதிமுக எதிர்ப்பு காரணமாக) ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார். பிரதமரைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டா்களே என்று புழுங்கியுள்ளார்.

இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை போய் நேரில் பார்த்துப் பேசி விட்டு வந்தார். வெளியில் வந்தவர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பரும் இல்லை என்றும் அவர் சொல்லி விட்டுப் போக புகைய ஆரம்பித்து விட்டது. பாஜக தரப்பிலிருந்து உடனடியாக தொடர்பு கொண்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், எங்கேயும் போகாதீர்கள். பிரதமரைப் பார்க்கலாம், பொறுமையாக இருங்கள் என்று சொல்லப்பட ஓபிஎஸ்ஸும் பின்வாங்கினார்.
முதல்வரை சந்தித்தது குறித்து அரசியலாக்கக் கூடாது என்று அறிக்கை விட்டார். தனது ஆதரவாளர்களையும் கருத்து கூறாமல் அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்டார். இப்போது அவரும் அமைதியாகி விட்டார். ஆனால் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார். நேற்று அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார். இதைத் தவிர நேற்று வேறு எந்தப் பதிவையும் அவர் போடவில்லை. இன்று, சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்ஸிடம் காணப்படும் இந்த மாற்றம் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு
"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி
அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்
வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)
ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு
Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!
ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!
2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!
{{comments.comment}}