சென்னை: பெண் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கான உயர அளவை 160 சென்டிமீட்டர் இருந்து 150 சென்டிமீட்டர் ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணிபுரிந்தும் சாதித்தும் வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் தற்போது ஓட்டுனரா, நடத்துனராக பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், லாரி ஓட்டுனர், ஏன் கன்டெய்னர் லாரியே கூட ஓட்டும் பெண்கள் பெருகி விட்டனர். அரசு பஸ்களையும் கூட பெண்கள் எளிதாக ஓட்டி அசத்தி வருகின்றனர். அதே போல பஸ் கண்டக்டர் வேலைகளிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பேருந்து நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிருக்கான உயரக் கட்டுப்பாடு 160 சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும் என்று இதுவரை இருந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது பெண் நடத்துனர்கள் தேர்வாகி வருகின்றனர். ஆனால் இந்த உயரக் கட்டுப்பாடு காரணமாக, அதிக அளவிலான பெண்கள் நடத்துனர் பணியில் சேர முடியவில்லை என்ற குறை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசுக்கம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது பெண் நடத்துனர்களுக்கான உயர அளவைக் குறைத்து அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு ஏற்கனவே இருந்து வந்த 160 சென்டிமீட்டர் என்ற உயரவு அளவு தற்போது 150 சென்டிமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிக அளவிலான பெண்கள் கண்டக்டர்களாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}