சென்னை: பெண் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கான உயர அளவை 160 சென்டிமீட்டர் இருந்து 150 சென்டிமீட்டர் ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணிபுரிந்தும் சாதித்தும் வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் தற்போது ஓட்டுனரா, நடத்துனராக பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், லாரி ஓட்டுனர், ஏன் கன்டெய்னர் லாரியே கூட ஓட்டும் பெண்கள் பெருகி விட்டனர். அரசு பஸ்களையும் கூட பெண்கள் எளிதாக ஓட்டி அசத்தி வருகின்றனர். அதே போல பஸ் கண்டக்டர் வேலைகளிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பேருந்து நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிருக்கான உயரக் கட்டுப்பாடு 160 சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும் என்று இதுவரை இருந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது பெண் நடத்துனர்கள் தேர்வாகி வருகின்றனர். ஆனால் இந்த உயரக் கட்டுப்பாடு காரணமாக, அதிக அளவிலான பெண்கள் நடத்துனர் பணியில் சேர முடியவில்லை என்ற குறை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசுக்கம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது பெண் நடத்துனர்களுக்கான உயர அளவைக் குறைத்து அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு ஏற்கனவே இருந்து வந்த 160 சென்டிமீட்டர் என்ற உயரவு அளவு தற்போது 150 சென்டிமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிக அளவிலான பெண்கள் கண்டக்டர்களாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
{{comments.comment}}