சென்னை: பெண் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கான உயர அளவை 160 சென்டிமீட்டர் இருந்து 150 சென்டிமீட்டர் ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணிபுரிந்தும் சாதித்தும் வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் தற்போது ஓட்டுனரா, நடத்துனராக பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், லாரி ஓட்டுனர், ஏன் கன்டெய்னர் லாரியே கூட ஓட்டும் பெண்கள் பெருகி விட்டனர். அரசு பஸ்களையும் கூட பெண்கள் எளிதாக ஓட்டி அசத்தி வருகின்றனர். அதே போல பஸ் கண்டக்டர் வேலைகளிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பேருந்து நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிருக்கான உயரக் கட்டுப்பாடு 160 சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும் என்று இதுவரை இருந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது பெண் நடத்துனர்கள் தேர்வாகி வருகின்றனர். ஆனால் இந்த உயரக் கட்டுப்பாடு காரணமாக, அதிக அளவிலான பெண்கள் நடத்துனர் பணியில் சேர முடியவில்லை என்ற குறை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசுக்கம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது பெண் நடத்துனர்களுக்கான உயர அளவைக் குறைத்து அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு ஏற்கனவே இருந்து வந்த 160 சென்டிமீட்டர் என்ற உயரவு அளவு தற்போது 150 சென்டிமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிக அளவிலான பெண்கள் கண்டக்டர்களாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}