- பூரணவள்ளி சேகர்
கமலா தன் மகள் தேவி மற்றும் மகன் கண்ணன் இருவரையும் மிகவும் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தாள். தன் கணவனின் இறப்பிற்குப் பின் தனி ஆளாகத் தன் இரு பிள்ளைகளுக்கும் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தாள்.
மகள் தேவி திருச்சியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தாள். மகன் கண்ணன் தன் மனைவி கவிதா மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வந்தான். கமலா மட்டும் கிராமத்தில் தனியாக இருந்தாள்.
சிறிய குழந்தைகள் எல்லாரும் அப்பத்தா என்று ஆசையுடன் கமலாவை அழைப்பார்கள். தன் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்தி களை கிராமத் திருவிழாவிற்கு வருமாறு அழைப்பாள். பேரப்பிள்ளைகளுக்கும் அப்பத்தாவின் மீது பிரியம் அதிகம்.

தங்களின் வேலையைக் காரணம் காட்டி வர மறுத்து வந்தனர் பிள்ளைகள் இருவரும். தற்போது கிராமத்தில் திருவிழா நடக்கிறது. பிள்ளைகள் அனைவரும் பேரன் பேத்திகளோடு வந்திருக்கின்றனர். கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
அனைவரும் கிராமத்திற்கு வந்திருப்பதையும் கூடி இருப்பதையும் நடு வீட்டில் வைத்திருந்த பெரிய புகைப்படத்தில் இருந்த கமலா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
ஆம். அனைவரும் ஒன்றாக வந்திருப்பது கமலா அப்பத்தாவின் துக்க நிகழ்வுக்காக என்று உங்களுக்குத் தெரியுமா?
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!
ஆசையே அலை போலே!
அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)
இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
{{comments.comment}}