மும்பை: அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். இந்த விருதுகள் 1929ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையான் தொகுத்து வழங்குகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் வழங்கும் விழாவிற்கு உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோருக்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா சார்பில் இதுவரை ஏஆர்.ரஹ்மான், கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்கள் விருது வென்றுள்ளார்கள். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர் அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே 2025ம் ஆண்டில் அகாடமியில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்தநிலையில், சர்வசேத அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர்.
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}