மும்பை: அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். இந்த விருதுகள் 1929ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையான் தொகுத்து வழங்குகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் வழங்கும் விழாவிற்கு உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோருக்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா சார்பில் இதுவரை ஏஆர்.ரஹ்மான், கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்கள் விருது வென்றுள்ளார்கள். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர் அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே 2025ம் ஆண்டில் அகாடமியில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்தநிலையில், சர்வசேத அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}