லாஸ் ஏஞ்சல்ஸ் : தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான காலம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் ஹாலிவுட் ஹில்ஸ் மலைகள் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை பற்றிய காட்டுத்தீ மளமளவென பரவியது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கரிலான வனப்பகுதியும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனவரி 08ம் தேதி ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மீதான் ஓட்டுப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஓட்டெடுப்புக்கான அவகாசம் ஜனவரி 12ம் தேதியுடன் நிறைவடையும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அங்கு நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. இதனால் ஆஸ்கர் பரிந்துரைக்கான ஓட்டளிப்பதற்கான கால அவகாசம் தற்போது ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை ஓட்டெடுப்பு மட்டுமல்ல அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் தற்போது தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 17 ம் தேதி தான் ஆஸ்கர் பரிந்துரையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இதுவும் தற்போது ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தேதி அடங்கிய விபரத்தை ஆஸ்கர் சிஇஓ பில் கிரமர் இமெயில் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}