லாஸ் ஏஞ்சல்ஸ் : தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான காலம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் ஹாலிவுட் ஹில்ஸ் மலைகள் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை பற்றிய காட்டுத்தீ மளமளவென பரவியது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கரிலான வனப்பகுதியும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனவரி 08ம் தேதி ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மீதான் ஓட்டுப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஓட்டெடுப்புக்கான அவகாசம் ஜனவரி 12ம் தேதியுடன் நிறைவடையும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அங்கு நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. இதனால் ஆஸ்கர் பரிந்துரைக்கான ஓட்டளிப்பதற்கான கால அவகாசம் தற்போது ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை ஓட்டெடுப்பு மட்டுமல்ல அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் தற்போது தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 17 ம் தேதி தான் ஆஸ்கர் பரிந்துரையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இதுவும் தற்போது ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தேதி அடங்கிய விபரத்தை ஆஸ்கர் சிஇஓ பில் கிரமர் இமெயில் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}