லாஸ் ஏஞ்சல்ஸ் : தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான காலம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் ஹாலிவுட் ஹில்ஸ் மலைகள் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை பற்றிய காட்டுத்தீ மளமளவென பரவியது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கரிலான வனப்பகுதியும், அதையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனவரி 08ம் தேதி ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மீதான் ஓட்டுப்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஓட்டெடுப்புக்கான அவகாசம் ஜனவரி 12ம் தேதியுடன் நிறைவடையும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அங்கு நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. இதனால் ஆஸ்கர் பரிந்துரைக்கான ஓட்டளிப்பதற்கான கால அவகாசம் தற்போது ஜனவரி 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரை ஓட்டெடுப்பு மட்டுமல்ல அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் தற்போது தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 17 ம் தேதி தான் ஆஸ்கர் பரிந்துரையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இதுவும் தற்போது ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தேதி அடங்கிய விபரத்தை ஆஸ்கர் சிஇஓ பில் கிரமர் இமெயில் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}