சென்னை: OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரியல் மற்றும் தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஓடிடி தளத்தில் சினிமா,வெப் சீரிஸ் மற்றும் வெப் தொடர்கள் போன்றவை அதிகளவில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரிஸ் மற்றும் தொடர்களை ஏராளமானோர் கண்டு களித்தும் வருகின்றனர். இவற்றிற்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின், நடிப்பு மற்றும் உடை பலரையும் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இது மட்டும் இல்லாமல் தினசரி பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர்களும் மாணவ மாணவியர்களும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இணையத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகள், வன்முறையை தூண்டக்கூடிய காட்சிகளும் இருப்பதால் அவர்களின் மனம் மாற்றத்தை நோக்கி செல்கிறது. இதனால் குழந்தைகள் தவறான வழிக்கு செல்லவும் இது வித்திடுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா வெப் தொடர்களை எவ்வித தணிக்கையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினசரி பலகோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒடிடி தளத்தில் வெளியாகும் சினிமா வெப் சீரிஸ்கள் மற்றும் வெப்தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திசய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}