சென்னை: OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரியல் மற்றும் தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஓடிடி தளத்தில் சினிமா,வெப் சீரிஸ் மற்றும் வெப் தொடர்கள் போன்றவை அதிகளவில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரிஸ் மற்றும் தொடர்களை ஏராளமானோர் கண்டு களித்தும் வருகின்றனர். இவற்றிற்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின், நடிப்பு மற்றும் உடை பலரையும் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இது மட்டும் இல்லாமல் தினசரி பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர்களும் மாணவ மாணவியர்களும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இணையத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகள், வன்முறையை தூண்டக்கூடிய காட்சிகளும் இருப்பதால் அவர்களின் மனம் மாற்றத்தை நோக்கி செல்கிறது. இதனால் குழந்தைகள் தவறான வழிக்கு செல்லவும் இது வித்திடுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா வெப் தொடர்களை எவ்வித தணிக்கையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினசரி பலகோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒடிடி தளத்தில் வெளியாகும் சினிமா வெப் சீரிஸ்கள் மற்றும் வெப்தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திசய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}