எனக்கே...எனக்கு!

Jul 20, 2026,03:01 PM IST

- ப.வினு


எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

இன்னொருவனுக்கும் பிடித்துப் போகும்போது,

திடீரென எனக்கு அது

பிடிக்காமல் போய்விடுகிறது.


அவர்கள் அதை ஒரு வியாதி என்கிறார்கள்...

நானோ அதை

என் பிரத்யேகமான அரியாசனம் என்கிறேன்.


ஏனெனில்,

எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு அழகில்

எனக்கென்ன தனி உரிமை இருக்க முடியும்?




கூட்ட நெரிசலில் குளிக்கும் ஒரு நதியை

நான் எப்படி எனது தீர்த்தம் என்று சொல்ல முடியும்?


நான் தேடுவது

எல்லோருக்கும் பொதுவான சொர்க்கத்தை அல்ல;

யாருக்கும் தெரியாத,

எனக்கு மட்டுமேயான ஒரு சிறு நரகத்தை.


என் உலகத்திற்குள்

அடுத்தவரின் கால்தடம் படுவதை

என் அகந்தை அனுமதிப்பதில்லை.

வியாதிதான்... மறுப்பதற்கில்லை.


ஆனால்,


எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்

இந்தச் சலிப்பான உலகத்தில்,

பகிர்ந்து கொள்ள முடியாத என் தனிமை

எவ்வளவு அழகானது!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்