- ப.வினு
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
இன்னொருவனுக்கும் பிடித்துப் போகும்போது,
திடீரென எனக்கு அது
பிடிக்காமல் போய்விடுகிறது.
அவர்கள் அதை ஒரு வியாதி என்கிறார்கள்...
நானோ அதை
என் பிரத்யேகமான அரியாசனம் என்கிறேன்.
ஏனெனில்,
எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு அழகில்
எனக்கென்ன தனி உரிமை இருக்க முடியும்?

கூட்ட நெரிசலில் குளிக்கும் ஒரு நதியை
நான் எப்படி எனது தீர்த்தம் என்று சொல்ல முடியும்?
நான் தேடுவது
எல்லோருக்கும் பொதுவான சொர்க்கத்தை அல்ல;
யாருக்கும் தெரியாத,
எனக்கு மட்டுமேயான ஒரு சிறு நரகத்தை.
என் உலகத்திற்குள்
அடுத்தவரின் கால்தடம் படுவதை
என் அகந்தை அனுமதிப்பதில்லை.
வியாதிதான்... மறுப்பதற்கில்லை.
ஆனால்,
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
பகிர்ந்து கொள்ள முடியாத என் தனிமை
எவ்வளவு அழகானது!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)
எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!
சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!
{{comments.comment}}