- கொடைக்கானல் ப.வினு
உன் பெயரைச் சொல்லி
ஒரு பூஞ்செடி வளர்க்கிறேன்.
அதன் விதையை மண்ணில் புதைத்தபோது
எனக்குத் தெரியாது,
நான் புதைத்தது ஒரு விதையை அல்ல...
உன்னோடு நான் வாழ்ந்த
சில கணங்களைத்தான் என்று.
அது வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் நினைவுகள்
பச்சையாய் உறைந்து போயிருக்கின்றன.

இரவுகளில்
அதன் இலைகளில் வந்து தங்கும் பனித்துளி,
நீ என்னைப் பார்த்து
ரகசியமாய் சிந்திய
அதே கண்ணீர்த்துளி போல ஒளிர்கிறது.
நான் அதற்குப் பேசக் கற்றுத்தரவில்லை,
ஆனால் அது
உன் குரலிலேயே காற்றில் அசைகிறது.
அதன் முதல் மொட்டு அவிழும் அந்த நொடி,
நீ என் தோளில் தலைசாய்க்கும்
அதே கணமாய் மாறிப்போகிறது.
உலகம் முழுவதையும்
எனக்குத் தர வேண்டாம்...
மலர்ந்துகொண்டிருந்தால் மட்டுமே போதும்!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}