உன் பேர் சொல்லி .. ஒரு பூஞ்செடி

Jul 22, 2026,04:54 PM IST

- கொடைக்கானல் ப.வினு


உன் பெயரைச் சொல்லி

ஒரு பூஞ்செடி வளர்க்கிறேன்.


அதன் விதையை மண்ணில் புதைத்தபோது

எனக்குத் தெரியாது,

நான் புதைத்தது ஒரு விதையை அல்ல...

உன்னோடு நான் வாழ்ந்த

சில கணங்களைத்தான் என்று.


அது வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு அங்குலத்திலும்

உன் நினைவுகள்

பச்சையாய் உறைந்து போயிருக்கின்றன.




இரவுகளில்

அதன் இலைகளில் வந்து தங்கும் பனித்துளி,

நீ என்னைப் பார்த்து

ரகசியமாய் சிந்திய

அதே கண்ணீர்த்துளி போல ஒளிர்கிறது.


நான் அதற்குப் பேசக் கற்றுத்தரவில்லை,

ஆனால் அது

உன் குரலிலேயே காற்றில் அசைகிறது.


அதன் முதல் மொட்டு அவிழும் அந்த நொடி,

நீ என் தோளில் தலைசாய்க்கும்

அதே கணமாய் மாறிப்போகிறது.


உலகம் முழுவதையும்

எனக்குத் தர வேண்டாம்...


என் ஜன்னலோரம்

உன் பெயர் தாங்கிய இந்தச் செடி

மலர்ந்துகொண்டிருந்தால் மட்டுமே போதும்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்