மருதாணிச் செவப்பே!

Apr 21, 2026,10:47 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


மருதாணிச் செவப்பே

மச்சானோட நெனப்பே‌‌‌


சிறுத்தாடும் இடையே

சிக்கிக்கிட்டதே மனதே


செங்காட்டு நெல்லே

செங்கரும்புச் சொல்லே


காவிரியின் வனப்பே

கலக்குது மினுமினுப்பே




வஞ்சிக்கொடி கொஞ்சும்நடை

தஞ்சமே  இலவம்பஞ்சே


முல்லைக்கொடி மெல்லச்சிரி

தள்ளாடுதே நெஞ்சே


பிரம்மன் படைத்தவளா

பிரமிக்க வைப்பவளா


இளங்கோ சிலம்பொலியா

இதயத்தின் துடிப்பதுவா


கோவர்த்தனகிரி 

மாவர்த்தனன்

சேவடிப் பனிச்சிந்தோ


ஏன் இப்படி நானிப்படி

பாடிக் கிடக்கின்றேன்


வா இப்படித் தேர் மறைவிலே

வாரித் தழுவிடுவேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்