பகலவன்

Feb 17, 2026,03:56 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


பகலவனே ஏன் இந்த கோபம் 

பூமியின் மீது  ...?

மரங்களை வெட்ட  அனுமதி அளித்ததாலோ....


என்ன செய்யும் பூமித்தாய்  யாரிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் ...

புரிந்தாலும் கேட்டால்தானே.....


காடுகளை வீடாக்கினான் மனிதன் 

வீட்டை பாலைவனமாக்குவதற்காக வா..... 


யார் செய்த பிழையோ....

இருந்தாலும் உன் கருணையால் 

சிறிது உன் கதிர்வீச்சின்  வீரியத்தைக்  குறைத்துக்கொள்...




இதமான ஒளி அளித்து 

உயிர்களைக்  காத்து நில்.....

உன் கோபத்தணலில் வாழுமா 

உயிர்கள்...


சற்றே கருணைகொள் 

உயிர்கள் மகிழ கார்முகிலுக்கும் இடம் கொடு....

சிறிது சடசடவென  சிரித்து விட்டுப் போகட்டும் ...

உயிர்கள் கலகலவெனச் சிரிக்க...

பூமித்தாயும் மளமளவென தழைக்க ......


கோபமும்,அன்பும் உள்ளடங்கியதுதானே வாழ்கை...

கோடைக்காலம் என்பதால் கோபம் மட்டும் காட்டாதே....

இடை இடையே அன்பையும் காட்டிடு

உயிர்களைக்காக்கும் பகலவனே.....


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்