"அவன் இவனை அடிச்சான்.. இவன் அவனை அடிச்சான்".. ஈரானில் புகுந்து பதிலடி கொடுத்த பாகிஸ்தான்!

Jan 18, 2024,10:21 AM IST
இஸ்லாமாபாத்: ஈரான் ராணுவம், பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தாக்கிய நிலையில் இன்று, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமா என்ற அச்சம் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணங்களில் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இங்குதான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த தீவிரவாத முகாம்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது இந்தியதான். காஷ்மீர் எல்லைப் புறம் வழியாக நடந்த தீவிரவாத ஊடுறுவல்களுக்கு அளவே இல்லை. இப்போதுதான் சற்று அடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் தீவிரவாதிகள் தற்போது ஈரானுக்குள் புகுந்து கலவரம் செய்து வருவதால் ஈரான் நாடு ஆத்திரமடைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் அல் அதில் என்ற தீவிரவாத குழு இயங்கி வருகிறது. இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் கோபமடைந்த ஈரான் நேற்று அதிரடியாக பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சிலர் கொல்லப்பட்டனர்.



இதனால் அதிர்ச்சி  அடைந்தது பாகிஸ்தான். ஈரானுக்கு சரியான பதிலடி தரப்படும் என்று அது எச்சரித்திருந்தது. இந்த நிலையில் இன்று ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.  ஈரான் நாட்டின் சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணங்களின் எல்லையில் உள்ள சரவன் என்ற இடத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுசிஸ்தான் விடுதலைப் படை ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் சுதந்திர பலுசிஸ்தானம் கோரி போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள் ஆகும். பலுசிஸ்தானில் ஏற்கனவே தனி நாடு கோரி போராட்டங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உரசல் போராக மாறி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஜெய்ஷ் அல் அதில் அமைப்பை கடந்த 2012ம் ஆண்டு நிறுவினர். இந்த அமைப்பு சமீப காலமாக ஈரானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்தது.  இதையடுத்து இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்தது.

ஏற்கனவே இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால், மத்திய கிழக்கில் அசாதாரண நிலை நிலவுகிறது. செங்கடல் பகுதியில் கப்பல்களைக் குறி வைத்து ஈரான் ஆதரவு அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் - ஈரான் இடையே மோதல் வெடித்திருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஈரான், பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுத நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்