திண்டுக்கல்: தைப்பூச திருவிழா ஜனவரி 26ம் தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாவான தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 26ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவே வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலை 4:30 மணி அளவில் பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 4ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து பழனிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் வருகிற 31ம் தேதி, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
{{comments.comment}}