சென்னை: மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள், செப்டம்பர் 11ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த தற்காலிக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
செப்டம்பர் 10 முதல் நவம்பர் 9 வரை:

ரயில் எண். 12654 திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் அதிகாலை 03.30 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) முடிவடையும்.
ரயில் எண். 12638 மதுரை சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் காலை 04.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) நிறுத்தப்படும் (ரயில் எண்.12637 சென்னை எழும்பூர் மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும்)
ரயில் எண்.22662 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் காலை 6.35 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) முடிவடையும்.
ரயில் எண்.16752 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் காலை 06.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) பயணத்தைத் தொடங்கும்.
செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை:
ரயில் எண். 12653 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து காலை 00.03 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.22675 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து காலை 08.12 மணிக்கு (சென்னை எழும்பூருக்கு பதிலாக) புறப்படும் (ரயில் எண்.22676 திருச்சிராப்பள்ளி சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும்)
ரயில் எண்.22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.16751 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.42 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.16751 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மாலை 6.42 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும்.
ரயில் எண்.22158 சென்னை எழும்பூர் - மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரையில் இருந்து காலை 06.45 மணிக்கு (சென்னை எழும்பூருக்குப் பதிலாக) புறப்படும் (ரயில் எண்.22157 மும்பை சிஎஸ்எம்டி சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸில் எந்த மாற்றமும் இல்லை, இது வழக்கம் போல் சென்னை எழும்பூரில் முடிவடையும்)
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}