Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

Apr 10, 2025,03:44 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகி முருகனுக்குரிய சிறப்பான விரத தினமாகும். இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனியாகும். அதே போன்று நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரமாகும். எனவே 12 கை முருகனுக்குச் சிறப்பான தினமாக இந்நாள் திகழ்கிறது. இத்தினத்தில் தான் பார்வதியை பரமேஸ்வரன் மணந்தார் என்றும், ராமன் சீதையை கரம் பிடித்தார் என்றும், முருகன் தெய்வானையை கரம் பிடித்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது.




இத்தகைய பல சிறப்புகளை பெற்ற பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 400 ரூபாயில் இருந்து 600க்கும், ஐஸ் மல்லி ரூ.200லிருந்து 300க்கும், முல்லை ரூ.400லிருந்து 750க்கும், ஜாதிமல்லி ரூ.450லிருந்து 750க்கும், கனகாம்பரம் ரூ.300லிருந்து 500க்கும், சாமந்தி ரூ.60லிருந்து 180க்கும், சம்பங்கி ரூ.150லிருந்து 240க்கும், அரளி பூ ரூ.200லிருந்து 350க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80லிருந்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கோயம்பேடு பூ வியாபாரி சங்கத் தலைவர் கூறுகையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் பூ வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்