விஜய்நிகழ்ச்சியில் பங்கேற்கும்.. பெண்குழந்தைகளை பெற்றவர்கள் முட்டாள்கள்.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு

Jun 05, 2025,09:26 PM IST

சேலம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) எம்.எல்.ஏ வேல்முருகன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தால் (தவெக) பாராட்டப்பட்ட பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.


சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி நல விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட, பெண் குழந்தைகளைப் பெற்றவர்களை "முட்டாள்கள்" என்று அழைத்தார். மேலும் ஒரு "கூத்தாடியை" கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ எப்படி அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.




அவர் மேலும் பேசுகையில், ஒரு நடிகர் 2 கிராம் தங்கம் பரிசாகக் கொடுத்தவுடன், சில முட்டாள்கள் தங்கள் பெண் குழந்தைகளை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஒரு தமிழனுக்கு சாதாரண  அறிவு கூட இல்லையா?. உன்னால் பிறந்து, வளர்ந்து, வளர்க்கப்பட்ட அந்தப் பெண் - நாளை யாரோ ஒருவரின் மனைவியாக வாழப் போகிறவள் - அவளை உன் அப்பா, அம்மா முன்னிலையில், ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் முன்னிலையில், ஒரு சினிமா நடிகரை கட்டிப்பிடித்து முத்தமிட அனுமதிக்கிறாய்... இது என்ன மாதிரியான கீழ்த்தரமான பிறப்பு? என்றும் வேல்முருகன் பேசினார். 


தனது பேச்சின்போது ரஜினிகாந்த் ரசிகர்களையும் கூட அவர் விமர்சித்துப் பேசியிருந்தார். வேல்முருகனின் கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விஜய்யின் தவெக வைச் சேர்ந்த தஹிரா வேல்முருகனை கடுமையாக விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி, திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் வேல்முருகனுக்கு எப்படி தமிழ் பெண்களையும் குழந்தைகளையும் அவமானப்படுத்த மனம் வந்தது? திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஏன் இதைக் கண்டிக்கவில்லை? தன்னை 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளும் முதல்வர் இந்த நடத்தையை கண்டிக்க வேண்டாமா? 


வேல்முருகன் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது பேச்சுக்கு திமுகவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தமிழக பெண்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்? வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய தஹிரா, வேல்முருகன் இந்த நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் கூறினார். 


தவெக தலைவர் விஜய், கல்வி சாதனைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வேல்முருகனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதற்கிடையே, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளா். பெண் பிள்ளைகளை இது போல பேசுவது தமிழ்ப் பண்பாடு இல்லை. விஜய்யை அன்போடு அண்ணா என்று அழைப்பதில் என்ன ஆபாசம் வந்து விட்டது என்று அவர் கேட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்