சென்னை: விவசாயிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாக்கியுள்ள பரமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி.வாசு உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லரை முன்னதாக பார்த்த இயக்குநர் - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சபரிஸ் இயக்கத்தில் மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் உருவான கால்ஸ் படம் கொரோனா காலகட்டத்தில் வெளியானது. கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாக்கிய இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது வரை இப்படம் 35 முறைக்கும் மேலாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்பட்டு டி ஆர் பி யில் நல்ல ரேட்டிங் பெற்று சாதனை படைத்து வருகிறது. அமேசான் பிரைமிலும் இதுவரை இப்படத்தை பல கோடி பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.
அப்படிப்பட்ட சிறந்த படத்தை இயக்கிய, இயக்குனர் சபரிஸ் தனது அடுத்த படைப்பான பரமன் படத்தை, இன்ஃபினிட்டி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைக்க,இப்பட பாடல்களை வேல்முருகன் மற்றும் முகேஷ் பாடியுள்ளனர்.
இதில் சூப்பர் குட் சுப்பிரமணி கதை நாயகனாக நடித்துள்ளார்.இவர் ஏற்கனவே ஜெய்பீம், பரியேறும் பெருமாள், உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.
மேலும் பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை எதிர்பாராத ஒரு சீரியசான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். இவர்களுடன் ஹலோ கந்தசாமி, வி.ஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வியலையும் மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாம்.
இந்த நிலையில் பரமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ் சி சந்திரசேகர், பி. வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
பரமன் படத்தின் ட்ரைலரை முன்னதாக பார்த்துவிட்ட இயக்குனர் சீமான், இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது. இப்படத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}