பாரீஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறி.. தோல்வியைத் தழுவினார் தீபிகா குமாரி

Aug 03, 2024,03:46 PM IST
பாரீஸ் : பாரீஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில் வித்தை பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில்,  அங்கு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீசில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 6க்கு 4 என்ற புள்ளிகள் பெற்று இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒற்றை பிரிவு வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், 16வது சுற்றில் ஜெர்மனியின் மிச்சிலி க்ரோப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




காலிறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனையுடன் மோதிய தீபிகா குமாரி அங்கு 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தை அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் 8வது நாளான இன்று (ஆகஸ்ட் 03) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனது மூன்றாவது பதக்கத்தை தவற விட்டுள்ளார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இதனால் அவர் தவற விட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருவதை விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்