பாரீஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறி.. தோல்வியைத் தழுவினார் தீபிகா குமாரி

Aug 03, 2024,03:46 PM IST
பாரீஸ் : பாரீஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில் வித்தை பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில்,  அங்கு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீசில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 6க்கு 4 என்ற புள்ளிகள் பெற்று இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒற்றை பிரிவு வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், 16வது சுற்றில் ஜெர்மனியின் மிச்சிலி க்ரோப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




காலிறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனையுடன் மோதிய தீபிகா குமாரி அங்கு 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தை அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் 8வது நாளான இன்று (ஆகஸ்ட் 03) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனது மூன்றாவது பதக்கத்தை தவற விட்டுள்ளார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இதனால் அவர் தவற விட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருவதை விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்