பாரீஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறி.. தோல்வியைத் தழுவினார் தீபிகா குமாரி

Aug 03, 2024,03:46 PM IST
பாரீஸ் : பாரீஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில் வித்தை பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில்,  அங்கு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீசில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 6க்கு 4 என்ற புள்ளிகள் பெற்று இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒற்றை பிரிவு வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், 16வது சுற்றில் ஜெர்மனியின் மிச்சிலி க்ரோப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




காலிறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனையுடன் மோதிய தீபிகா குமாரி அங்கு 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தை அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் 8வது நாளான இன்று (ஆகஸ்ட் 03) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனது மூன்றாவது பதக்கத்தை தவற விட்டுள்ளார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இதனால் அவர் தவற விட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருவதை விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக

news

ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!

news

சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!

news

தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை

news

மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!

news

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!

news

எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!

news

இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!

அதிகம் பார்க்கும் செய்திகள்