பாரீஸ் ஒலிம்பிக் 2024 : வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறி.. தோல்வியைத் தழுவினார் தீபிகா குமாரி

Aug 03, 2024,03:46 PM IST
பாரீஸ் : பாரீஸ் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பெண்களுக்கான வில் வித்தை பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில்,  அங்கு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.


2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரீசில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் வில்வித்தை போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 6க்கு 4 என்ற புள்ளிகள் பெற்று இந்தியாவின் தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் ஒற்றை பிரிவு வில்வித்தை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், 16வது சுற்றில் ஜெர்மனியின் மிச்சிலி க்ரோப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




காலிறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனையுடன் மோதிய தீபிகா குமாரி அங்கு 4-6 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தை அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியின் 8வது நாளான இன்று (ஆகஸ்ட் 03) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனது மூன்றாவது பதக்கத்தை தவற விட்டுள்ளார். பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இதனால் அவர் தவற விட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஆண்களுக்கான 71 கிலோ பிரிவில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கி வருவதை விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்