பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலாமான தொடக்க விழாவுடன் தொடங்கியுள்ளன. இதில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடி ஏந்தி வந்தார்கள் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவும், டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சரத் கமலும்.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விழா தொடங்கி கோலாகலமாக முடிவடைந்தது. கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், வீராங்கனைகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அணி வகுத்து வந்தனர். பிரெஞ்சு தலைநகரான பாரீஸின் சீயன் ஆற்றுப் பகுதியில் நடந்த இந்த விழா பார்க்கவே படு ஜோராக இருந்தது. தொடக்க விழா நடந்தபோது கன மழை பெய்தபோதும் கூட விழாவைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை அது பாதிக்கவில்லை.

தொடக்க விழாவில் இந்திய அணியினர் மிடுக்காக பாரம்பரிய உடை அணிந்து கம்பீரமாக நடை போட்டு வந்தனர். சரத் கமலும், பி.வி. சிந்துவும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினர்.
வழக்கமாக போட்டி நடைபெறும் மெயின் ஸ்டேடியத்தில்தான் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் முறையாக வெளியில் விழா நடத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவை சியன் ஆற்றின் கரையோரமாக ஆயிரக்கணக்கானர் கூடியிருந்து கண்டு களித்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் விழாவை நேரில் கண்டு களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அக்கம் பக்கத்து வீடுகள், மொட்டை மாடிகளிலும் மக்கள் கூடியிருந்தனர். அது 2 லட்சம் பேர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக மிக வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக்கில் இந்திய அணி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 பேர் கொண்ட வலுவான அணி கலந்து கொள்கிறது. இதில் தொடக்க விழாவில் 78 பேர் கலந்து கொண்டனர்.
இந்தியா கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கம் பெற்றிருந்தது. இந்த முறை அதை விட கூடுதலாக வாங்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணியும், மக்களும் உள்ளனர். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 35 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதில் தங்கம் 10, வெள்ளி 9 மற்றும் வெண்கலம் 16 ஆகும்.
ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்ச பதக்கங்களை வென்றது என்றால் அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிதான். அதில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியிருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை அள்ளும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்துள்ளனர்.
Best of luck Team India!
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}