"நான் பாஸ் தரவில்லை.. பி.ஏ.தான் கொடுத்தார்".. சபாநாயகரிடம் நேரில் விளக்கம் அளித்த பாஜக எம்.பி!

Dec 13, 2023,07:10 PM IST

டெல்லி: லோக்சபாவுக்குள் நடந்த அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய மனோரஞ்சன் என்பவருக்கு மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாதான் பாஸ் கொடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


லோக்சபாவுக்குள் இன்று காலை சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் என்ற இருவர் ஊடுறுவி கலர் புகையை கிளப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியே நீலம் என்ற பெண்ணும், அமோல் ஷிண்டே என்ற நபரும் இதே பாணியில் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.


இதில் மனோ ரஞ்சனுக்கு, மைசூரு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாதான் பாஸ் கொடுத்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான பாஸும் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதனால் பிரதாப் சிம்ஹா  சர்ச்சையில் சிக்கியுள்ளார்.




இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவிக்கையில், பிரதாப் சிம்ஹா பொறுப்பான எம்.பி. அவர் அறிமுகம் இல்லாமல் யாருக்கும் பாஸ் கொடுத்திருக்க முடியாது. அறிமுகம் இருந்திருப்பதால்தான் பாஸ் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த முறை நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்ததும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் என்று கூறியுள்ளது சர்ச்சையை மேலும் வலுவாக்கியுள்ளது.


கைது செய்யப்பட்டுள்ள மனோரஞ்சனுக்கு 35 வயதாகிறது. மைசூரு விவேகானந்த் பல்கலைக்கழகத்தில்தான் அவர் பொறியியல் படித்துள்ளார். இவரது தந்தை மைசூரில் உள்ள விஜயநகரில் தங்கியிருக்கிறார். பிரதாப் சிம்ஹா, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட்டு 43.46 சதவீத வாக்குகள் வாங்கி அபார வெற்றி பெற்றவர். பின்னர் 2019 தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு 52.27சதவீத வாக்குகள் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதாப் சிம்ஹா அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தவர். பல பத்திரிகைகளில் இவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் கூட எழுதியுள்ளார்.


சபாநாயகரிடம் நேரில் விளக்கம்




இதற்கிடையே, எம்.பி. பிரதாப் சிம்ஹா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தனது அலுவலகத்தை மனோரஞ்சன் அணுகியதாகவும், புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க பாஸ் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதையடுத்து தனது பி.ஏ.தான் பாஸ் கொடுத்துள்ளதாக தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் எம்.பி. சிம்ஹா.


அத்தோடு தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் எம்.பி. சிம்ஹா. அதில் நாடாளுமன்றத்தைச் சுற்றிப் பார்க்க வந்த வித்யாவர்த்தக கல்லூரி அரசியல் அறிவியல் மாணவர்களுடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை எம்.பி. சிம்ஹா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

May Day: தொழிலாளர் தினம்.. உழைப்பில்லாமல் கிடைப்பது நிலைத்திருப்பது இல்லை!

news

Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

news

Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்