நிம்மதியாய் வாழ வேண்டும்!

Aug 06, 2026,04:06 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி


நிம்மதியாய் வாழ வேண்டும்!

நித்தமும் நினை 

நினைத்து வாழ

நிமலனே நின்னருள் வேண்டும்!


சிறப்புடன் சிந்தை குளிர 

வாழ வேண்டும்

அதற்கு அந்த சிவசக்தி

உதவ வேண்டும்! 


புண்ணியங்கள் புரிய வேண்டும்! 

அதற்கு அந்தப் 

புருஷோத்தமன்

உதவ வேண்டும்! 




பாவங்கள் பண்ணாமல்

வாழ வேண்டும்! அதற்கு 

அந்தப் பரமன் சிவன் 

உதவ வேண்டும்! 


நல்வாழ்வு வாழ வேண்டும்! 

நல்ல படியாக அந்த 

நான்முகன் தலையில்

எழுதி இருக்க வேண்டும்!


சிறப்புகள் சேர வேண்டும்! 

சீர்பெருமை கிடைக்க வேண்டும்! 

அதற்கு அந்தச் சிவன் மகன் 

குகன் உதவ வேண்டும்! 


நல்லபடியாக இறைவனடி சேர 

இறைவன் அருள் வேண்டும்!

இதற்கு மேல் 

வேறு என்ன வேண்டும்?


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்