நிம்மதியாய் வாழ வேண்டும்!

Aug 06, 2026,04:06 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி


நிம்மதியாய் வாழ வேண்டும்!

நித்தமும் நினை 

நினைத்து வாழ

நிமலனே நின்னருள் வேண்டும்!


சிறப்புடன் சிந்தை குளிர 

வாழ வேண்டும்

அதற்கு அந்த சிவசக்தி

உதவ வேண்டும்! 


புண்ணியங்கள் புரிய வேண்டும்! 

அதற்கு அந்தப் 

புருஷோத்தமன்

உதவ வேண்டும்! 




பாவங்கள் பண்ணாமல்

வாழ வேண்டும்! அதற்கு 

அந்தப் பரமன் சிவன் 

உதவ வேண்டும்! 


நல்வாழ்வு வாழ வேண்டும்! 

நல்ல படியாக அந்த 

நான்முகன் தலையில்

எழுதி இருக்க வேண்டும்!


சிறப்புகள் சேர வேண்டும்! 

சீர்பெருமை கிடைக்க வேண்டும்! 

அதற்கு அந்தச் சிவன் மகன் 

குகன் உதவ வேண்டும்! 


நல்லபடியாக இறைவனடி சேர 

இறைவன் அருள் வேண்டும்!

இதற்கு மேல் 

வேறு என்ன வேண்டும்?


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

news

பெண்களை அச்சுறுத்தும் ‘முடக்கு வாதம்’: அறிகுறிகளும், கண்டறியும் வழிகளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்