- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் சிந்தனையை, செயலை
வழி நடத்துபவனே!
அனைவர்க்கும்
இறைவனே!
உண்டுறங்கி
மகிழ்ந்ததன்றி
வேறொன்றும்
அறியாத
என்னையும்
ஒரு பொருட்டாய்
நினைத்து வாழ
வைப்பவனே!

முக்கண்ணனே!
முதல்வனே!
எந்நாட்டவர்க்கும்
இறைவனே!
எனை வாழ்விக்க
வந்த எந்தன்
பரம்பொருளே!
பரமேஸ்வரனே!
சிந்தை நிறைந்த
சிவபெருமானே!
உலகத்து வாழ்க்கையிலே
உழன்று வரும் எனக்கு
அருள் புரிந்து
ஆதரித்து என்னை
வாழவைப்பவனே!
எந்தன் ஈசனே! சிவனே!
நான் பேசுபொருள்
அத்தனையும்
உன்னையல்லால்
வேறொன்றுமில்லை!
உன் திருவடி தொழுதேன்!
திருச்சிற்றம்பலமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}