கடல் சூழ்ந்த உலகெல்லாம்!

Aug 08, 2026,12:59 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கடல் சூழ்ந்த 

உலகெல்லாம் 

காக்கின்ற 

பெருமாள்! 


திருமகளின் 

மனங்கவர்ந்த 

திருத் தலைவன் 

திருமால்!


திருமுருகன் 

குமரனுக்கு 

மனம் மகிழும் 

மாமன்! 


தெய்வத்தில் 

உயர் தெய்வம் 

இவர் எடுத்த 

தசாவதாரம்! 




ஆழி சூழ் 

உலகை எல்லாம் 

ஆட்டுவிக்கும் 

தலைவன்! 


பிறப்பெடுத்த 

ஜீவன்களைக்

காக்கின்ற 

கடவுள்! 


ராதைக்குக்

கண்ணன்! 

கோதைக்கு 

அரங்கன்!


எனக்குக்

கிருஷ்ணன்! 

பார் முழுமைக்கும் 

பரந்தாமன்! 


நானிலம் 

போற்றும் 

நமோ 

நாராயணன்! 


உலகத்து 

உயிர்களில் 

எல்லாம் 

ஒரே புருஷோத்தமன்! 


பார்த்தனுக்கு 

சாரதி! 

பசுபதிக்கு 

அவனே கதி! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்