பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் பேங்க் வைத்த ஆப்பு.. அப்படீன்னா பேடிஎம் யுபிஐ வேலை செய்யுமா?

Feb 01, 2024,05:08 PM IST

மும்பை: பிப்ரவரி மாதம் 29ம் தேதி முதல் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது மக்களிடையே பல்வேறு குழப்பங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


இன்றைய நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் ஒரு பரிவர்த்தனை. இதனை தவிர்த்து பணபரிமாற்றம் என்பது மிகவும் கடினமானதாக மக்கள் பார்க்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக பேடிஎம் உள்ளது. 


இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பேடிஎம் நிறுவனம் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வங்கிச் சேவைக்கு ரிசர்வ் வங்கி தற்பொழுது தடை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி பேடிஎம் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி அதிரடியாக வங்கி செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. வருகிற 29ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.




வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு 35ஏவின் படி இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கிமேற்கொண்டுள்ளது. புதிதாக வைப்பு நிதி பெறவோ, வாடிக்கையாளர்களுக்கு கடன் பரிவர்த்தனைகளோ மேற்கொள்ளக்கூடாது, முன்கூட்டியே ப்ரீபெய்டு வசதிகள், வாலெட்டுகள், பாஸ்ட் டேக், போக்குவரத்து அட்டை பயன்பாடு உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் பேடிஎம்க்கு ரிசவ் வங்கி தடை விதித்துள்ளது. பிப்ரவரி 29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி தங்கள் பணத்தை இருப்பு உள்ளவரை திரும்பி பெற்றுக் கொள்ள இயலும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்த கொள்ளவும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.



இப்போது மக்களுக்கு எழுந்துள்ள குழப்பம் என்னவென்றால் பேடிஎம் பயன்படுத்தி யுபிஐ வசதியை பயன்படுத்த முடியுமா என்பதுதான். பேடிஎம் வங்கிக் கணக்குடன் உங்களது பேடிஎம் யுபிஐ இணைத்திருந்தால் அதை பயன்படுத்த முடியாது. அதேசமயம், பிற வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் வழக்கம் போல பயன்படுத்த முடியும். அதேசமயம், மொபைல் போன் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. அந்த வசதிகள் அனைத்தும் பிப்ரவரி 29ம் தேதியுடன் முடிவுக்கு வரும்.


சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்