மும்பை: பிப்ரவரி மாதம் 29ம் தேதி முதல் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது மக்களிடையே பல்வேறு குழப்பங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் ஒரு பரிவர்த்தனை. இதனை தவிர்த்து பணபரிமாற்றம் என்பது மிகவும் கடினமானதாக மக்கள் பார்க்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக பேடிஎம் உள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பேடிஎம் நிறுவனம் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வங்கிச் சேவைக்கு ரிசர்வ் வங்கி தற்பொழுது தடை விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி பேடிஎம் நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி அதிரடியாக வங்கி செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. வருகிற 29ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு 35ஏவின் படி இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கிமேற்கொண்டுள்ளது. புதிதாக வைப்பு நிதி பெறவோ, வாடிக்கையாளர்களுக்கு கடன் பரிவர்த்தனைகளோ மேற்கொள்ளக்கூடாது, முன்கூட்டியே ப்ரீபெய்டு வசதிகள், வாலெட்டுகள், பாஸ்ட் டேக், போக்குவரத்து அட்டை பயன்பாடு உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் பேடிஎம்க்கு ரிசவ் வங்கி தடை விதித்துள்ளது. பிப்ரவரி 29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் பணத்தை இருப்பு உள்ளவரை திரும்பி பெற்றுக் கொள்ள இயலும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்த கொள்ளவும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இப்போது மக்களுக்கு எழுந்துள்ள குழப்பம் என்னவென்றால் பேடிஎம் பயன்படுத்தி யுபிஐ வசதியை பயன்படுத்த முடியுமா என்பதுதான். பேடிஎம் வங்கிக் கணக்குடன் உங்களது பேடிஎம் யுபிஐ இணைத்திருந்தால் அதை பயன்படுத்த முடியாது. அதேசமயம், பிற வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் வழக்கம் போல பயன்படுத்த முடியும். அதேசமயம், மொபைல் போன் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. அந்த வசதிகள் அனைத்தும் பிப்ரவரி 29ம் தேதியுடன் முடிவுக்கு வரும்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}