Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!

Nov 27, 2024,08:45 PM IST

திருப்பதி : உலகின் பணக்கார கடவுள் என பக்தர்களால் போற்றப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இளைஞர் ஒருவர் ரூ.15,000 திருடிய சம்பவம் பக்தர்களிடம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


திருப்பதி கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை மூலமாக தான் திருப்பதி கோவிலுக்கு அதிகமான வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.3 முதல் 4 கோடி வரையிலும், வருடத்திற்கு ரூ.1500 கோடிக்கும் அதிகமாகவும் உண்டியல் வசூல் பெறப்பட்டு வருகிறது. உண்டியலில் பெறப்படும் காணிக்கைகள் பறக்கமணி சேவாதாரிகளால் தினமும் எண்ணப்பட்டு, திருமலை திருப்ப\தி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருவது வழக்கம்.




இந்நிலையில் நவம்பர் 23ம் தேதி பகல் 2 மணி அளவில் திருப்பதி கோவிலில் இருக்கும் இரும்பு உண்டியலில் இருந்து இளைஞர் ஒருவர் பணத்தை திருடி உள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமிரா மூலம் இதனை கண்டுபிடித்த கோவில் பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தனர். சிசிடிவி கேமிராவில் பதிவான அடையாளங்களின் அடிப்படையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை மாலை 6 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.15,000 பணம் மீட்கப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் தமிழ்நாட்டின் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வேணுலிங்கம் என்பது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நேரத்தில் பட்டபகலில் இப்படி ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் திருப்பதி கோவில் உண்டியல் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


திருப்பதி கோவில் உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் உண்மை தான் என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் இஓ வெங்கைய்யா செளத்ரியும் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்

news

TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?

news

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

news

தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!

news

ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!

news

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

news

ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Axiom4: விண்வெளியில் புது வரலாறு எழுதும் இந்தியா.. ISS நிலையத்திற்குப் பயணமானார் சுபான்ஷு சுக்லா

news

மூன்றாவது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்