- செ. சாந்தி சின்னத்தம்பி
உயர்ந்த தோற்றம்... உருக்குலையா உள்ளம் ...
இரும்பின் உறுதி இளகிய மனது...
படிக்காத மேதை தான் ...
பார்போற்றிய பாமரன் தான் ...
பட்டினியை அறிந்ததனால்... பசித்த வயிறுக்கு உண விட்டவன் தான் ...
கல்வியின் வாசனையைக்
காலம் முடியும் வரை சுமக்கச் சொன்னவன் தான்...
காலா காந்தியாம்...
காலத்திற்கும் பேர் கொண்ட
சீர்திருத்தவாதியாம்...

தொழிலையும் பெருக்க வைத்தான்...
பாடசாலையும் திறந்து வைத்தான்...
சாதி மதம் கடந்தவன் தான் ....
சமத்துவம் நிலை நாட்டியவன் தான்...
பதவி ஆசை இல்லாத பண்பாளன்தான்...
பிறருக்குப் பதவி தந்த மாண்பாளன் தான்...
தொலைநோக்குப் பார்வை கொண்டவன் தான்...
தொடர்ந்து மக்கள் மனதில் நின்றவன் தான்...
வாழ்வை வரலாறாக்கியவன்...
ஏழைப் பங்காளனவன் ...
எளிமையின் தூய்மை அவன்...
வலிமையின் வார்ப்பு அவன் ...
கர்மவீரனாய் தடம் பதித்தவன்
தர்மவானாய் உலகில் நிறைந்தவன்
அவனே கல்விக்கண் தந்த எங்கள் காமராசனாம்.
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}