இதப்பார்ரா..  எதுக்கெல்லாம் கோபம் வருது பாருங்க.. இதுக்கெல்லாமா குண்டு வீசுவாங்க!!

Nov 10, 2023,04:00 PM IST
சென்னை: சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கான காரணத்தை கேட்டால் மக்களே அதிர்ந்து போவீர்கள். 

அப்படி என்ன தான்  காரணம்  என்கிறீர்களா? தொடர்ந்து படிங்க.

சமீபத்தில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது. இந்த நிலையில் தற்பொழுது 
சென்னையில் மீண்டும் ஒரு குண்டு வீச்சு. அதுவும் கோவிலில்.

இதை கேட்டவுடன் ஆஹா... இது "தீவிரவாதிகள்" வேலையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிய வந்தது உண்மை. அதைக் கேட்டதும் அதிர்ச்சி வருவதற்குப் பதில் சிரிப்பும், ஆச்சரியமும்தான் காரணம். குண்டு வீச்சுக்கான காரணம் அப்படி.



சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ளது வீரபத்திர சுவாமி கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் தான்  முரளி கிருஷ்ணன் என்பவர். இவர் மது போதையில் கோவிலில் பெட்ரோல் குண்டுவீசி அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்தார். நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முரளி கிருஷ்ணனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையின்போது முரளி கிருஷ்ணன் சொன்ன காரணம் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது..

முரளி கிருஷ்ணன் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக இங்கதான் சாமி கும்பிடுகிறேன். ரொம்ப பக்தியானவன் நான். இந்த சாமியிடம் நிறைய கோரிக்கை வைத்தேன்.. வேண்டுதல் வைத்தேன்.. ஆனால் எதுவுமே நிறைவேறவில்லை. கடவுள் எனக்கு எதுவுமே செய்யலை.. அப்படிச் செய்யாத கோபத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார் முரளி கிருஷ்ணன்.  இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.

ஏய்யா ராசா.. எதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுறதுன்னு விவஸ்தை இல்லையா என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்