இதப்பார்ரா..  எதுக்கெல்லாம் கோபம் வருது பாருங்க.. இதுக்கெல்லாமா குண்டு வீசுவாங்க!!

Nov 10, 2023,04:00 PM IST
சென்னை: சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கான காரணத்தை கேட்டால் மக்களே அதிர்ந்து போவீர்கள். 

அப்படி என்ன தான்  காரணம்  என்கிறீர்களா? தொடர்ந்து படிங்க.

சமீபத்தில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்தது. இந்த நிலையில் தற்பொழுது 
சென்னையில் மீண்டும் ஒரு குண்டு வீச்சு. அதுவும் கோவிலில்.

இதை கேட்டவுடன் ஆஹா... இது "தீவிரவாதிகள்" வேலையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிய வந்தது உண்மை. அதைக் கேட்டதும் அதிர்ச்சி வருவதற்குப் பதில் சிரிப்பும், ஆச்சரியமும்தான் காரணம். குண்டு வீச்சுக்கான காரணம் அப்படி.



சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ளது வீரபத்திர சுவாமி கோவில். இந்த பகுதியை சேர்ந்தவர் தான்  முரளி கிருஷ்ணன் என்பவர். இவர் மது போதையில் கோவிலில் பெட்ரோல் குண்டுவீசி அப்பகுதி மக்களை கதிகலங்க வைத்தார். நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து முரளி கிருஷ்ணனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையின்போது முரளி கிருஷ்ணன் சொன்ன காரணம் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டது..

முரளி கிருஷ்ணன் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக இங்கதான் சாமி கும்பிடுகிறேன். ரொம்ப பக்தியானவன் நான். இந்த சாமியிடம் நிறைய கோரிக்கை வைத்தேன்.. வேண்டுதல் வைத்தேன்.. ஆனால் எதுவுமே நிறைவேறவில்லை. கடவுள் எனக்கு எதுவுமே செய்யலை.. அப்படிச் செய்யாத கோபத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார் முரளி கிருஷ்ணன்.  இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.

ஏய்யா ராசா.. எதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுறதுன்னு விவஸ்தை இல்லையா என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்