சென்னை: பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மரணமடைந்தார்.
கஜேந்திரா, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வி.ஏ. துரை. ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தையும் இவர்தான் தயாரித்தார். படத் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து போனதால், துரையும் நொடித்துப் போயிருந்தார். சிரமமான நிலையில் இருந்து வந்த அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

சர்க்கரை நோய் அதிகமாகி ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த அவர் நேற்று இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 69. காலமான வி.ஏ. துரைக்கு,விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவியர் உண்டு.
முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என இரு மகள்களும், 2வது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கம் கடம்பாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
வி.ஏ. துரை மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}