சென்னை: பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மரணமடைந்தார்.
கஜேந்திரா, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வி.ஏ. துரை. ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தையும் இவர்தான் தயாரித்தார். படத் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து போனதால், துரையும் நொடித்துப் போயிருந்தார். சிரமமான நிலையில் இருந்து வந்த அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது.
சர்க்கரை நோய் அதிகமாகி ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த அவர் நேற்று இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 69. காலமான வி.ஏ. துரைக்கு,விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவியர் உண்டு.
முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என இரு மகள்களும், 2வது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கம் கடம்பாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
வி.ஏ. துரை மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}