கம்பீரத்தின் அடையாளம்.. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரியாவிடை..!

Sep 19, 2023,11:54 AM IST

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எம்பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.


கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு பெரும் பொருட் செலவில் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடம் பெயரவுள்ளன. நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது நாளை முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு அமர்ந்து அனைத்து எம்.பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக அனைத்து எம்பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் , குழுவாகவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா ஜெகதீப் தங்கர், ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே, டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 




பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்பு சுமார் 750 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர் .அப்போது பாஜா எம்பி நர்கஹாரி அமீன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறு பரபரப்பு நிலவியது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்ட பிறகு போட்டோ எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல சட்டம் நடைமுறைகளை உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல் காரசாரமான விவாதங்களையும் கண்டிருக்கிறது. இந்திய அரசியலின் பல முக்கிய தலைவர்களின் கம்பீரக் குரல்களும் ,அவர்களின் விவாதங்களும் அரங்கேறி இருந்தது.  சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவிலானது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 


இந்த கட்டிடம் 1921 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்  நாடாளுமன்ற முதல் கூட்டம் 1927 ஜனவரி 19-ல் நடைபெற்றது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு விடை கொடுத்துபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளிலும் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்