புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எம்பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு பெரும் பொருட் செலவில் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடம் பெயரவுள்ளன. நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது நாளை முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு அமர்ந்து அனைத்து எம்.பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக அனைத்து எம்பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் , குழுவாகவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா ஜெகதீப் தங்கர், ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே, டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்பு சுமார் 750 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர் .அப்போது பாஜா எம்பி நர்கஹாரி அமீன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறு பரபரப்பு நிலவியது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்ட பிறகு போட்டோ எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல சட்டம் நடைமுறைகளை உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல் காரசாரமான விவாதங்களையும் கண்டிருக்கிறது. இந்திய அரசியலின் பல முக்கிய தலைவர்களின் கம்பீரக் குரல்களும் ,அவர்களின் விவாதங்களும் அரங்கேறி இருந்தது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவிலானது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்த கட்டிடம் 1921 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் நாடாளுமன்ற முதல் கூட்டம் 1927 ஜனவரி 19-ல் நடைபெற்றது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு விடை கொடுத்துபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளிலும் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}