அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்தவர்களில் 133 பேர் பலியாகியுள்ளனர். பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஏர் இந்திய விமானம் ஒரு மருத்துவ விடுதியில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் விமானம் கீழே விழுந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பயணிகள் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர் என்று தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் பெற 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகர காவல்துறை அவசர சேவைகள் மற்றும் தகவல்களுக்கான 07925620359 எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
{{comments.comment}}