அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

Jun 12, 2025,06:55 PM IST

அகமதாபாத் : அகமதாபாத்  விமான விபத்தில் பயணம் செய்தவர்களில் 133 பேர் பலியாகியுள்ளனர். பயணிகளில் 169 பேர் இந்தியர்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து  லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஏர் இந்திய விமானம் ஒரு மருத்துவ விடுதியில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.


அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 3 நிமிடத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் விமானம் கீழே விழுந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பயணிகள் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர்  என்று தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.    




ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் பெற 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகர காவல்துறை அவசர சேவைகள் மற்றும் தகவல்களுக்கான  07925620359 எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்