சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதளங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 8.51 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம் முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
https://www.tnresults.nic.in/wpprex.htm
2023ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வை எழுதியோரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தார்கள். 2022ம் ஆண்டு இது 93.80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதி க அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தன என்பது நினைவிருக்கலாம்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}