சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதளங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 8.51 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம் முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
https://www.tnresults.nic.in/wpprex.htm

2023ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வை எழுதியோரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தார்கள். 2022ம் ஆண்டு இது 93.80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதி க அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தன என்பது நினைவிருக்கலாம்.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}