சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இணையதளங்களை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பிளஸ்டூ தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 8.51 லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம் முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை அறிய இணையதளங்களை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
https://www.tnresults.nic.in/wpprex.htm

2023ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வை எழுதியோரில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தார்கள். 2022ம் ஆண்டு இது 93.80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதி க அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தன என்பது நினைவிருக்கலாம்.
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
தொடுதிரையில் தொலைந்த நட்பு!
{{comments.comment}}