சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. புதுச்சேரி, காரைக்காலிலும் பிளஸ்டூ தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
இன்று தொடங்கும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 22ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். முதல் கால் மணி நேரம் கேள்வித்தாளைப் படிக்க அவகாசம் அளிக்கப்படும். 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுதலாம். இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மாணவ மாணவியர் பிட் அடிப்பது ஆள் மாறாட்டம் செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 - பத்தாம் வகுப்பு தேர்வுகள்
பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வானது மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வுகள் முடிந்த பின்னர், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கும். ஏப்ரல் 8ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
தேர்வுகள் தொடங்கி விட்டன.. மாண, மாணவியரே நம்பிக்கையோடும், அச்சமில்லாத மனப்பான்மையுடனும் ரிலாக்ஸ்டாக தேர்வுகளை எழுதுங்கள்.. எதுவுமே வாழ்க்கையின் முடிவு அல்ல.. எல்லாமே தொடக்கம்தான். எனவே எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக தேர்வுகளை எழுதுங்கள்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}