தியானம் செய்ய கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

May 29, 2024,05:55 PM IST

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். இதற்காக இன்று முதல் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, தற்போது 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.

அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் தங்க உள்ளார்.  விவேகானந்தர் பாறையில் மொத்தம் 45 மணி நேரம் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 




கன்னியாகுமரியில்  உள்ள கடலோர காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தனிமையில் தியானம் செய்யவுள்ளதால், பூம்புகார் சுற்றுலா படகு குழாம் முழுவதுமாக பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்துள்ளது.


சுற்றுலா படகில் செல்ல வந்த பொதுமக்களிடம் போலீசார் சோதனை செய்தனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் புனிதத் தலம் சென்று தியானம் செய்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, பிரதமர் மோடி வருகையைக்  கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸார் அறிவித்துள்ளதால் குமரி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


விவேகானந்தர் பாறை என்பது குமரிக் கடலில் உள்ள பாறைப் பகுதியாகும். இங்குதான் அமர்ந்து விவேகானந்தர் தியானம் செய்தார். இதனால் இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் வந்தது. இந்தப் பாறைக்கு அருகில்தான் இன்னொரு பாறை மீது பெரும்புலவர் திருவள்ளுவரின் கம்பீரமான சிலை அமைந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். மறைந்த முதல்வர் கருணாநிதி உருவாக்கிய இந்த சிலை, தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்