டில்லி : இந்தியாவில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், முறைசார்ந்த துறைகளில் (Formal Sector) புதிய பணியாளர்களை ஆதரிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) தங்களைப் பதிவு செய்துகொண்ட புதிய ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 15 லட்சம் ஊழியர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாக விடுவிக்கிறார்.
தவணை முறைகள் எவ்வாறு வழங்கப்படும்?
புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஊழியர்களின் கணக்குகளுக்கு இந்த ஊக்கத்தொகை நேரடியாக இரு தவணைகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
முதல் தவணை (ரூ. 7,500): புதிய பணியிடத்தில் இணைந்து வெற்றிகரமாக 6 மாத காலத்தைப் பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு, முதல் தவணையாக 7,500 ரூபாய் இன்று பிரதமர் மோடியால் விடுவிக்கப்படுகிறது.
இரண்டாவது தவணை (ரூ. 7,500): பணியில் சேர்ந்து ஓராண்டு (12 மாதங்கள்) முழுமையாகப் பூர்த்தி செய்யும் போது, மீதமுள்ள 7,500 ரூபாய் இரண்டாவது தவணையாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்:

மத்திய அரசின் இந்தத் திட்டமானது இளைஞர்களிடையே முறை சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதையும், நிறுவனங்கள் புதிய பணியாளர்களைப் பதிவு செய்வதை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, பி.எப். (PF) கணக்குடன் இணையும் இளம் தொழிலாளர்களுக்கு இது ஒரு சிறந்த நிதி ஊக்கமாகவும், ஆரம்பகால வேலைவாய்ப்புத் பாதுகாப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நாடு முழுவதும் உள்ள சுமார் 15 லட்சம் இளம் ஊழியர்கள் இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}