ராமர் என்பவர் பிரச்சினை அல்ல.. பிரச்சினைகளுக்கு தீர்வு தருபவர்.. உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி!

Jan 22, 2024,06:58 PM IST
அயோத்தி:  ராமர் என்பவர் பிரச்சினைக்குரியவர் அல்ல.. பிரச்சனைகளுக்கு தீர்வு தருபவர்..
கோயில் கட்ட பாடுபட்ட கரசேவகர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்.. என உணர்ச்சி பொங்க பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .

அயோத்தியில் இன்று பால ராமர் சிலையை சிறப்பாக பிரதிஷ்டை செய்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் பின்னர் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து புதிய பால  ராமர் சிலையின் கண்களில் இருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு, ராமர் சிலையின் பாதங்களில் தாமரை மலர் வைத்து பிரதமர் பூஜை செய்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கோவில் முழுவதும் மலர் தூவப்பட்டது. அனைவரும் ராமா ராமா  கூறி பிரார்த்தனை செய்தனர். பிரதமர் ராமர் சிலையின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.



ராமரின் சிலையை அழகான சிறுவன் சிரிப்பது போன்று மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். ராமர் தலையில் கிரீடம், கையில் வில் அம்புடன் காட்சியளிக்கிறார். நகை அலங்காரத்துடன் ராமரின் சிலை ஜொலி ஜொலிக்கிறது.

பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து முடித்த பிறகு, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். இவரை தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:

அயோத்திக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் யோகிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த அற்புதமான நாளில் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இன்று தான் தீபாவளி. ராமர் கோவில் கட்டுவதற்காக பாடுபட்ட  கரசேவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இன்று அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டதால் இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்துள்ளது. இனி ஒரு காலத்திலும் ராமர் கொட்டகையில் குடி கொள்ள மாட்டார். ஏராளமான தியாகங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
 


இந்தியா புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. ராமர் கோவில் திறப்பின் மூலம் அடிமை மனநிலைக்கு முடிவு கட்டியுள்ளோம். நமது தியாகத்தில் சிறிய குறைபாடு இருந்தது. ராமர் என்பது பிரச்சனைக்கானவர் அல்ல. பிரச்சனைகளுக்கு தீர்வு தருபவர். காலங்கள் கடந்தாலும் ராமர் என்றும் நிலைத்திருப்பார். ராமர் என்பது நெருப்பு அல்ல. ஒரு சக்தி. இன்று நாளை என ஆயிரம் ஆண்டுகள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

ராமனின் புகழ் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது. பல நூற்றாண்டு கால தியாகங்களுக்கும், பொறுமைக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. தாமதமாக கோயில் கட்டியதற்காக ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார். ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. பல ஆண்டுகாலம் கழித்து ராமர் திரும்பி வந்துவிட்டார். சட்டப்படியே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நன்றி. பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். ராமர் பகவான்கி ஜெய் எனக் கூறி விடை பெற்றார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்