"என் இதயத்தில் குடியிருக்கும் ராஜ்கோட்.. மறக்க முடியுமா உங்களை".. எமோஷனல் ஆன பிரதமர் மோடி!

Feb 25, 2024,12:02 PM IST

ராஜ்கோட்: பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டையும், அதன் மக்களையும் என்னால் மறக்கவே முடியாது.. இவர்கள்தான் எனக்கு முதல் அங்கீகாரத்தையும், வெற்றியையும் கொடுத்தவர்கள் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுதான் குஜராத் மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ராஜ்கோட்டுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மிக நெருக்கமான பந்தமும் இழையோடிக் கிடக்கிறது என்பது சுவாரஸ்யமான தகவலாகும். இந்த ராஜ்கோட்டிலிருந்துதான் பிரதமர் மோடியின் தேர்தல் அரசியல் வெற்றிப்பயணம் தொடங்கியது என்பதுதான் அந்த தகவல்.




2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் போட்டியிட்ட முதல் தொகுதி ராஜ்கோட். பிப்ரவரி 24ம் தேதி தான் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நேற்றுடன் 22 வருடங்களை அவரது தேர்தல் அரசியல் பயணம் பூர்த்தி செய்துள்ளது. இன்று ராஜ்கோட்டில் அவர் குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.


இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது எதிர்பாராத ஒற்றுமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜ்கோட் குறித்து அவர் குறிப்பிடுகையில்,  எப்போதுமே எனது இதயத்தில் ராஜ்கோட்டுக்கும், ராஜ்கோட் மக்களுக்கும் தனி இடம் உண்டு.  இந்த மக்கள் தான் என் மீது நம்பிக்கை வைத்து,எனக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்தனர். அன்று முதல் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் நான் குஜராத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எதிர்பாராத ஒற்றுமை இது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


பிரதமர் மோடியின் ராஜ்கோட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான வீடியோவும் தற்போது டிவிட்டரில் ரவுண்டடிக்கிறது. அதை பிரதமரும் ஷேர் செய்துள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்