"என் இதயத்தில் குடியிருக்கும் ராஜ்கோட்.. மறக்க முடியுமா உங்களை".. எமோஷனல் ஆன பிரதமர் மோடி!

Feb 25, 2024,12:02 PM IST

ராஜ்கோட்: பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டையும், அதன் மக்களையும் என்னால் மறக்கவே முடியாது.. இவர்கள்தான் எனக்கு முதல் அங்கீகாரத்தையும், வெற்றியையும் கொடுத்தவர்கள் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுதான் குஜராத் மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ராஜ்கோட்டுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மிக நெருக்கமான பந்தமும் இழையோடிக் கிடக்கிறது என்பது சுவாரஸ்யமான தகவலாகும். இந்த ராஜ்கோட்டிலிருந்துதான் பிரதமர் மோடியின் தேர்தல் அரசியல் வெற்றிப்பயணம் தொடங்கியது என்பதுதான் அந்த தகவல்.




2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் போட்டியிட்ட முதல் தொகுதி ராஜ்கோட். பிப்ரவரி 24ம் தேதி தான் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நேற்றுடன் 22 வருடங்களை அவரது தேர்தல் அரசியல் பயணம் பூர்த்தி செய்துள்ளது. இன்று ராஜ்கோட்டில் அவர் குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.


இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது எதிர்பாராத ஒற்றுமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜ்கோட் குறித்து அவர் குறிப்பிடுகையில்,  எப்போதுமே எனது இதயத்தில் ராஜ்கோட்டுக்கும், ராஜ்கோட் மக்களுக்கும் தனி இடம் உண்டு.  இந்த மக்கள் தான் என் மீது நம்பிக்கை வைத்து,எனக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்தனர். அன்று முதல் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் நான் குஜராத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எதிர்பாராத ஒற்றுமை இது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


பிரதமர் மோடியின் ராஜ்கோட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான வீடியோவும் தற்போது டிவிட்டரில் ரவுண்டடிக்கிறது. அதை பிரதமரும் ஷேர் செய்துள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்