"என் இதயத்தில் குடியிருக்கும் ராஜ்கோட்.. மறக்க முடியுமா உங்களை".. எமோஷனல் ஆன பிரதமர் மோடி!

Feb 25, 2024,12:02 PM IST

ராஜ்கோட்: பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட் குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டையும், அதன் மக்களையும் என்னால் மறக்கவே முடியாது.. இவர்கள்தான் எனக்கு முதல் அங்கீகாரத்தையும், வெற்றியையும் கொடுத்தவர்கள் என்று பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதுதான் குஜராத் மாநிலத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ராஜ்கோட்டுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மிக நெருக்கமான பந்தமும் இழையோடிக் கிடக்கிறது என்பது சுவாரஸ்யமான தகவலாகும். இந்த ராஜ்கோட்டிலிருந்துதான் பிரதமர் மோடியின் தேர்தல் அரசியல் வெற்றிப்பயணம் தொடங்கியது என்பதுதான் அந்த தகவல்.




2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அவர் போட்டியிட்ட முதல் தொகுதி ராஜ்கோட். பிப்ரவரி 24ம் தேதி தான் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். நேற்றுடன் 22 வருடங்களை அவரது தேர்தல் அரசியல் பயணம் பூர்த்தி செய்துள்ளது. இன்று ராஜ்கோட்டில் அவர் குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.


இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது எதிர்பாராத ஒற்றுமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜ்கோட் குறித்து அவர் குறிப்பிடுகையில்,  எப்போதுமே எனது இதயத்தில் ராஜ்கோட்டுக்கும், ராஜ்கோட் மக்களுக்கும் தனி இடம் உண்டு.  இந்த மக்கள் தான் என் மீது நம்பிக்கை வைத்து,எனக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்தனர். அன்று முதல் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் நான் குஜராத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எதிர்பாராத ஒற்றுமை இது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.


பிரதமர் மோடியின் ராஜ்கோட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான வீடியோவும் தற்போது டிவிட்டரில் ரவுண்டடிக்கிறது. அதை பிரதமரும் ஷேர் செய்துள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து

news

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்

news

மேற்காசிய வான்வெளியைத் தவிருங்கள்.. விமான நிறுவனங்களுக்கு DGCA அறிவுரை

news

ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!

news

ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள்.. அசத்திய சென்னை மாநகராட்சி மாணவர்கள்!

news

எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)

news

வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு

news

செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

news

நிறை குடம்

அதிகம் பார்க்கும் செய்திகள்