டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டியை இன்று மாலை 6:00 மணிக்கு தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் டேராடூன், ஹரித்வார், நைனிட்டால், ஹெல்த்வானி, ருத்ராப்பூர், சிவபுரி, நியூ ஹெக்ரி உள்ளிட்ட ஏழு இடங்களில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகின்றன.

தடகளம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், நீச்சல், ஹாக்கி, பளு தூக்குதல், குத்து சண்டை, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கால்பந்து, மல்யுத்தம், உள்ளிட்ட 35 வகையான போட்டிகளில் மொத்தம் 9500 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 391 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 35 வகையான போட்டிகளில் 33 போட்டிகள் மற்றும் கண்காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ள களரி மற்றும் யோகாசனம் ஆகியவற்றிற்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
38 வது தேசிய விளையாட்டுப் போட்டியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று ஒடிசாவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் உத்கர்ஷ் ஒடிசா - மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025 ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தரகாண்டில் உள்ள டேராடூனுக்குச் சென்று மாலை 6 மணியளவில், 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!
ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!
{{comments.comment}}