இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யூபிஐ சேவை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Feb 12, 2024,04:33 PM IST

டெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யூபிஐ முறையில் பணப் பரிமாற்ற  சேவையை காணொளி மூலம் இன்று  தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.


காணெொளி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்நாத்,  இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெளிநாடுகளில்  பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமம் இன்றி பண பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யூபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. 




இந்தியாவில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.

அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யூபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை அடுத்து இலங்கை, மொரீசியஸ் நாடுகளும் யூபிஐ மூலம் பணம் செலுத்தம் நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இலங்கை மற்றும் மொரீசியஸ்  நாடுகளில் பணப்பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியா.


அது மட்டுமில்லாமல் மொரீசியஸ் நாட்டில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யுபிஐ சேவையின் மூலம் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பயணிகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் இந்த சேவை பயன்படுத்த முடியும். இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆன இந்தியாவின வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் வேகமாக மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணி பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்