உக்ரைன் வந்து சேர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. நமஸ்தே சொல்லி வரவேற்ற உக்ரைன் தலைவர்கள்!

Aug 23, 2024,05:06 PM IST

கீவ்:   பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டுக்கு வந்துள்ளார். உக்ரைன் நாட்டுக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு உக்ரைன் தலைவர்கள் நமஸ்தே என்று சொல்லி கும்பிட்டு வரவேற்பு கொடுத்தனர்.


சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்தது உக்ரைன். 1991ம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடானது. அதன் பிறகு அந்த நாட்டுக்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரும் சென்றதில்லை. ரஷ்யா வரை மட்டுமே இந்தியத் தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் முதல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். 




முன்னதாக போலந்து சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணித்து, கீவ் நகருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவருக்கு உக்ரைன் தலைவர்கள் நமஸ்தே என்று சொல்லி கும்பிட்டு இந்திய முறைப்படி வணக்கம் வைத்து வரவேற்றனர்.


சமீபத்தில்தான் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் பிரதமர் மோடி. தற்போது உக்ரைனுக்கு வந்துள்ளார்.  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக முக்கியமாக இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா இரு நாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நடுநிலை வகிக்கிறது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்