சென்னை: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை காண பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆறாம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படை முதன் முதலில் கடந்த 1932 ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி நிறுவப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக டெல்லியில் உள்ள விமானப்படை தளங்களில் சாகச நிகழ்ச்சிகள், அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் எட்டாம் தேதி இந்திய விமானப்படையின் 92 வது விமானப்படை தினம் வருகிறது.

இந்த 92வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சிகள் மற்றும் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள விமானப்படை பயிற்சி மையத்திலும் அணிவகுப்பு பயிற்சிகளையும் செய்து வருகின்றனர்.
இதில் பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், உள்ளிட்ட பல்வேறு வகை விமானங்களும் இந்த அணிவகுப்பில் ஈடுபட உள்ளன. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்படும் விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}