பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை.. எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்.. போலீஸ் அறிவிப்பு

Mar 04, 2024,09:25 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசவுள்ளார். இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். பல்வேறு மாநிலங்களுக்கும் அவர் செல்ல ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் திருநெல்வேலியில் பாஜக பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வெகுவாகப் புகழ்ந்தும் பேசியிருந்தார்.


விமான நிலையம் டூ நந்தனம் ரோடு ஷோ




இந்த நிலையில் மீண்டும் இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, கல்பாக்கத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்குள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையத்திற்குச் செல்லும் அவர் அங்கு அணு உலை வளர்ச்சித் திட்டத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வார். அதன் பின்னர் விமான நிலையம் திரும்பும் பிரதமர், மாலை 5 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 


விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ரோடுஷோ நடத்தி நந்தனம் வருகிறார் பிரதமர். வழியெங்கும் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். நந்தனம் கூட்டத்தில் பிரதமருடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.


பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம், விமான நிலையம் முதல் நந்தனம் வரையிலான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


விழா நடைபெறும் இடம், அண்ணாசாலை, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வாகனதாரர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அண்ணாசாலையிலிருந்து எஸ்.வி. படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சிபெட் ஜங்ஷன், 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மாற்று சாலைகளைப் பயன்படுத்துமாறு வாகனதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 




பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில்  வணிக வாகனங்கள் தடை செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.


மத்தியகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை

இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராமாபுரம் முதல் கத்திப்பாரா சாந்திப்பு வரை

அசோக்பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை

விஜயநகர் முதல் கிண்டி கன்கார்ட் சந்திப்பு வரை

அண்ணா சிலை முதல் மவுன்ட் ரோடு வரை

தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை

சமீபத்திய செய்திகள்

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு

news

மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்

news

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்

news

செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ

news

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்

news

823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்

news

மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்