பிரதமர் நரேந்திர மோடியின்.. சென்னை வருகை ஒத்திவைப்பு.. தமிழக பாஜக அறிவிப்பு!

Jun 17, 2024,06:00 PM IST

சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வர இருந்த பிரதமர் நரேந்திர  மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். 




இதற்கிடையே சென்னை டூ நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் திட்டமிட்டிருந்தார். இதற்காக வரும் 20ம் தேதி  சென்னைக்கு வருகை தர இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக  ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.


பேசின்பாலம் யார்ட்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி டூ நாகர்கோவில், மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி, மற்றும் நாகர்கோவில் சந்திப்பு டூ கன்னியாகுமரி இடையே கட்டி முடிக்கப்பட்ட இரட்டை பாதை திட்டத்தை திறந்து வைத்தல், போன்றவற்றை காணொளி வாயிலாக திறந்து வைக்க இருந்தார். 


இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு பயணமாக சென்னைக்கு வருகை தர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்குரிய  மாற்று தேதி அறிவிக்கப்படும் என கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். மறு தேதி அறிவித்த பிறகு  திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம் என தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்