சென்னை: வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாடு இத்தாலியில் நடைபெற்றது. இதற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

இதற்கிடையே சென்னை டூ நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வரத் திட்டமிட்டிருந்தார். இதற்காக வரும் 20ம் தேதி சென்னைக்கு வருகை தர இருந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
பேசின்பாலம் யார்ட்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி டூ நாகர்கோவில், மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி, மற்றும் நாகர்கோவில் சந்திப்பு டூ கன்னியாகுமரி இடையே கட்டி முடிக்கப்பட்ட இரட்டை பாதை திட்டத்தை திறந்து வைத்தல், போன்றவற்றை காணொளி வாயிலாக திறந்து வைக்க இருந்தார்.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு பயணமாக சென்னைக்கு வருகை தர இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்குரிய மாற்று தேதி அறிவிக்கப்படும் என கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். மறு தேதி அறிவித்த பிறகு திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம் என தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}