ராணிப்பேட்டை: அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கே.பாலு, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அமைச்சர் துரைமுருகனைப் பார்த்து நேருக்கு நேராக தனக்கு ஆசிர்வாதம் செய்த அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி கூறுவதாக கூறி அசரடித்தார். அவர் வாக்கு கேட்ட விதத்தைப் பார்த்து துரைமுருகன் தனது ஸ்டைலில் சிரித்தபடி கிளம்பிச் சென்றார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று அரக்கோணம். இங்கு வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். மறுபக்கம் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் துரைமுருகன் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியில் அமைச்சர் துரைமுருகன் வந்தபோது அவருக்கு எதிராக கே.பாலு வாக்கு சேகரித்தபடி வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பாலுவைப் பார்த்த துரைமுருகன் காரை ஸ்லோ செய்து நிறுத்தச் சொன்னார்.
துரைமுருகனைப் பார்த்த கே.பாலுவும் குஷியாகி விட்டார். உடனே மைக்கை டக்கென துரைமுருகன் பக்கம் திருப்பி, முருகனுடைய அருள் எனக்குக் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் எனக்கு அன்பான அருளை, ஆசியை, வெற்றி பெற வேண்டும் என்ற உங்களுடைய வாழ்த்தை அடிபணிந்து ஏற்றுக் கொள்கிறேன். தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றவுடன் அண்ணனை நேரில் வந்து சந்தித்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வேன் என்று பேச, அதைக் கேட்ட துரைமுருகன், தனது ஸ்டைலில் தலையை ஜாலியாக ஆட்டியபடி சிரித்தபடி கிளம்பிச் சென்றார்.
எதிரும் புதிருமானவர்களைச் சந்தித்தாலும் கூட அந்த இடத்தை கலகலப்பாக்குவதில் துரைமுருகன் கில்லாடி. அவரையே சிரிக்க வைத்து குஷிப்படுத்தி விட்டார் கே.பாலு.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}