"கூட்டணிதான் வைப்போம்".. அடிச்சுச் சொல்லிருச்சு பாமக.. கூப்பிடப்போவது யாரு.. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு

Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக கூட்டணிதான் வைப்போம் என்று பாமக திட்டவட்டமாக கூறி விட்டது. இதையடுத்து அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்கப் போவது யார் என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனைக் கூட்டங்கள் சூடு பிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதில் ஒரு தெளிவில்லை. இருப்பினும் அக்கட்சி தீவிரமாக குழுக்களை அமைத்து ஆலோசனைகளில் தீவிரமாகியுள்ளது.


எஸ் டி பி ஐ, புதிய பாரதம் உள்ளிட்ட சில கட்சிகள்தான் அதிமுக கூட்டணியில் இப்போதைக்கு உள்ளன.  பாஜக போய் விட்டது. பாமக, தேமுதிக நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் அக்கட்சிகளுடன் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த நிலையில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.




இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இந்நிலையில் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு உள்ளது.


கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். இது தொடர்பான தீர்மானத்தை பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை. பாமக தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது தயாராக இல்லை. மாநில நலன், தேசிய நலனின் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். 


எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த முடிவு எடுக்கும் முழு அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக அமைத்த கூட்டணியில் பாமக போட்டியிட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு

news

மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்

news

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்

news

செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ

news

அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்

news

823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்

news

மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

news

ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்