"கூட்டணிதான் வைப்போம்".. அடிச்சுச் சொல்லிருச்சு பாமக.. கூப்பிடப்போவது யாரு.. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு

Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக கூட்டணிதான் வைப்போம் என்று பாமக திட்டவட்டமாக கூறி விட்டது. இதையடுத்து அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்கப் போவது யார் என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனைக் கூட்டங்கள் சூடு பிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதில் ஒரு தெளிவில்லை. இருப்பினும் அக்கட்சி தீவிரமாக குழுக்களை அமைத்து ஆலோசனைகளில் தீவிரமாகியுள்ளது.


எஸ் டி பி ஐ, புதிய பாரதம் உள்ளிட்ட சில கட்சிகள்தான் அதிமுக கூட்டணியில் இப்போதைக்கு உள்ளன.  பாஜக போய் விட்டது. பாமக, தேமுதிக நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் அக்கட்சிகளுடன் அதிமுக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த நிலையில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.




இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இந்நிலையில் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கு உள்ளது.


கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவோம். இது தொடர்பான தீர்மானத்தை பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை. பாமக தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது தயாராக இல்லை. மாநில நலன், தேசிய நலனின் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். 


எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த முடிவு எடுக்கும் முழு அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம். குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக அமைத்த கூட்டணியில் பாமக போட்டியிட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்