சென்னை: கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் கவிஞர், அரசியல்வாதி, நடிகர், பேச்சாளர் என பல்வேறு திறமைகளை பெற்றுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 கலந்து கொண்டு தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதன் மூலம் சினேகன் எந்தெந்த பாடலை எழுதினார். இதெல்லாம் சினேகன் எழுதிய பாடல்களா..? என ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது பிக் பாஸ் நிகழ்ச்சி.

நடிகராக, அமீர் இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்த பிரமோஷனைப் பெற்று உயர்திரு 420 திரைப்படத்தில் நாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதற்கிடையே கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், சினேகன் சின்னத்திரை நாயகியான கன்னிகாவை காதலித்து 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நான்கு வருட திருமண வாழ்க்கையில் தற்போது இந்த தம்பதிகள் பிரபலமாகிவிட்டனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் அழகான வாழ்க்கை தருணங்களையும் பதிவிட்டு வந்தார் சினேகன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்தது.
கன்னிகா கர்ப்பம் தரித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார் சினேகான். ஐந்தாம் மாதம் வளைகாப்பு, ஒன்பதாம் மாதம் வளைகாப்பு, குழந்தை பெற்றெடுக்கும் நேரம் வந்துவிட்டது,குழந்தைக்கு தேவைப்படும் பொருட்களை முன்கூட்டியே வாங்குவது என அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் தான் ஜனவரி 25ஆம் தேதி சினேகன் கன்னிகா தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற- என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது..
தாயே எந்தன் மகளாகவும், மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் 25.1.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் இதயமும் மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது.. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்.. என்றும் அன்புடன் சினேகன், கன்னிகா சினேகன் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
{{comments.comment}}