சென்னை: ஹேமா கமிட்டி எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும். திரைத்துறையில் மட்டுமல்லாது நாட்டின் எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைரமுத்து.
அப்போது அவர் பேசுகையில், இந்த ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும் முக்கியமான துறைகளில் அமைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு. திரைத்துறைகளில் மட்டுமல்ல நாட்டில் எல்லா துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றால் பெண்மையில் இருக்கிற மென்மை என்ற ஒரு கருத்தை நீங்கள் நீக்கிவிட வேண்டும்.

ஆணுக்கு ஆண்மை என்று இருப்பதும், பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும், நாட்டில் பேதங்களை ஏற்படுத்துகிற மதிப்பீடுகள் என்று கருதுகிறேன். ஆணும் சரி சமம் தான்.பெண்ணும் சரிசமம் தான். இதில் யாரும் யாரையும் துன்புறுத்துவது என்பது பாலினம் ஆனது என்று காட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. பெண் இனம் பலவீனமான பாலினம் அல்ல.
இந்திய பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு கோரிக்கை, பெண்களுக்கு கூடுதலாக பாதுகாப்பிற்கான பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேருங்கள். பெண்களுக்கு விளையாட்டு பயிற்சி மட்டும் போதாது, எழுத்து பயிற்சி மட்டும் போதாது, பெண் குழந்தைகளுக்கு தங்களை தாங்களே காத்துக் கொள்கிற உடல் வலிமையை ஊட்ட செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இது புதிய இந்தியாவை எழுதுவதற்காக தொடக்கமாக இந்த ஹேமா கமிட்டியை நான் பார்க்கின்றேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}