எர்ணாகுளம் : விபத்தை ஏற்படுத்தி விட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, தப்பிக்க முயன்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசன்சை போலீசார் ரத்து செய்துள்ளனர். இது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது இந்த படம். கொடைக்கானல் குணா குகையில் எடுக்கப்பட்டது, படம் முழுக்க வரும் குணா படத்தின் அபிராமி பாடலின் இசை ஆகியவை மொழியை கடந்த தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பெரிதும் ஈர்த்தது. எளிமையான கதையில் இப்படி ஒரு திரில்லர் படமா? இப்படி கூட ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டு, படத்துடன் ஒன்ற வைத்து படம் எடுக்க முடியுமா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்த சமீப கால இந்திய சினிமாவின் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருந்தது.

இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் புதிய முகங்களாக இருந்தாலும் இந்த ஒரே படத்திலேயே பிரபலமாகி விட்டனர். இந்த படத்தில் சுபாஷ் என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்ரீநாத் பாஷி. எர்ணாகுளத்தில் காரில் சென்ற ஸ்ரீநாத், பைக்கில் வைத்த இளைஞர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இருந்தாலும் அதிவேகமாக காரை ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரது டிரைவிங் லைசன்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகைகள் அளித்த பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி உள்ளது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
Laborious Labourers.. கை கொடுப்போம்.. கடின உழைப்பாளிகளுக்கு!
{{comments.comment}}