விபத்தை ஏற்படுத்திய மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர்...லைசன்சை ரத்து செய்த போலீஸ்

Oct 17, 2024,11:35 AM IST

எர்ணாகுளம் : விபத்தை ஏற்படுத்தி விட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, தப்பிக்க முயன்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசன்சை போலீசார் ரத்து செய்துள்ளனர். இது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது இந்த படம். கொடைக்கானல் குணா குகையில் எடுக்கப்பட்டது, படம் முழுக்க வரும் குணா படத்தின் அபிராமி பாடலின் இசை ஆகியவை மொழியை கடந்த தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பெரிதும் ஈர்த்தது. எளிமையான கதையில் இப்படி ஒரு திரில்லர் படமா? இப்படி கூட ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டு, படத்துடன் ஒன்ற வைத்து படம் எடுக்க முடியுமா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்த சமீப கால இந்திய சினிமாவின் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருந்தது.




இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் புதிய முகங்களாக இருந்தாலும் இந்த ஒரே படத்திலேயே பிரபலமாகி விட்டனர். இந்த படத்தில் சுபாஷ் என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்ரீநாத் பாஷி. எர்ணாகுளத்தில் காரில் சென்ற ஸ்ரீநாத், பைக்கில் வைத்த இளைஞர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி  கேமிராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


இருந்தாலும் அதிவேகமாக காரை ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரது டிரைவிங் லைசன்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகைகள் அளித்த பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி உள்ளது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்