எர்ணாகுளம் : விபத்தை ஏற்படுத்தி விட்டு, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, தப்பிக்க முயன்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசன்சை போலீசார் ரத்து செய்துள்ளனர். இது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் மஞ்சுமெல் பாய்ஸ். பலரின் பாராட்டுக்களையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது இந்த படம். கொடைக்கானல் குணா குகையில் எடுக்கப்பட்டது, படம் முழுக்க வரும் குணா படத்தின் அபிராமி பாடலின் இசை ஆகியவை மொழியை கடந்த தமிழ் ரசிகர்களையும் இந்த படம் பெரிதும் ஈர்த்தது. எளிமையான கதையில் இப்படி ஒரு திரில்லர் படமா? இப்படி கூட ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டு, படத்துடன் ஒன்ற வைத்து படம் எடுக்க முடியுமா? என பலரையும் ஆச்சரியப்பட வைத்த சமீப கால இந்திய சினிமாவின் முக்கியமான படமாக இந்த படம் அமைந்திருந்தது.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் புதிய முகங்களாக இருந்தாலும் இந்த ஒரே படத்திலேயே பிரபலமாகி விட்டனர். இந்த படத்தில் சுபாஷ் என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்தவர் தான் ஸ்ரீநாத் பாஷி. எர்ணாகுளத்தில் காரில் சென்ற ஸ்ரீநாத், பைக்கில் வைத்த இளைஞர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இருந்தாலும் அதிவேகமாக காரை ஓட்டி, விபத்தினை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரது டிரைவிங் லைசன்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகைகள் அளித்த பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, பலரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இது போன்ற பிரச்சனையில் சிக்கி உள்ளது மலையாள திரையுலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}