சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இர்ஃபான், இர்ப்பான்ஸ் வியூ சேனலை நடத்தி வருகிறார். இதில் இவர் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கு பேன்ஸ் ஃபாலோவர் அதிகமானது. இதனைத் தொடர்ந்து இவர் உணவு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது மட்டுமல்லாமல் தனது திருமணம், மனைவியின் வளைகாப்பு, குடும்ப நிகழ்ச்சிகளையும் வெளியிட்டு வந்தார்.
இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் டாக்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தனது குழந்தையின் தொப்புள் கொடியையும், ஏதோ துணிக்கடையை ரிப்பன் வெட்டி திறப்பது போல வெட்டியுள்ளார் இர்பான். இதை வீடியோவாகவும் போடவே பெரும் சர்ச்சையானது.
இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான். இந்த விவகாரம் பெரிதாகவே சுகாதாரத்துறை மற்றும் ஊரக மருத்துவ சேவைத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் மருத்துவ கவுன்சிலிலும், போலீஸிலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர் நிவேதிதா ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதேபோல போலீஸ் தரப்பில் இர்பானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரி போலீசார் இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, இர்பானிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}