குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

Oct 22, 2024,06:24 PM IST

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.  


இர்ஃபான்,  இர்ப்பான்ஸ் வியூ சேனலை நடத்தி வருகிறார். இதில் இவர் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது  மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கு பேன்ஸ் ஃபாலோவர் அதிகமானது. இதனைத் தொடர்ந்து இவர் உணவு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது மட்டுமல்லாமல் தனது திருமணம், மனைவியின் வளைகாப்பு, குடும்ப நிகழ்ச்சிகளையும்  வெளியிட்டு வந்தார்.




இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் டாக்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தனது குழந்தையின் தொப்புள் கொடியையும், ஏதோ துணிக்கடையை ரிப்பன் வெட்டி திறப்பது போல வெட்டியுள்ளார் இர்பான். இதை வீடியோவாகவும் போடவே பெரும் சர்ச்சையானது.


இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான். இந்த விவகாரம் பெரிதாகவே சுகாதாரத்துறை மற்றும் ஊரக மருத்துவ சேவைத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் மருத்துவ கவுன்சிலிலும், போலீஸிலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர் நிவேதிதா ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதேபோல போலீஸ் தரப்பில் இர்பானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


செம்மஞ்சேரி போலீசார் இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, இர்பானிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்