குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

Oct 22, 2024,06:24 PM IST

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.  


இர்ஃபான்,  இர்ப்பான்ஸ் வியூ சேனலை நடத்தி வருகிறார். இதில் இவர் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது  மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கு பேன்ஸ் ஃபாலோவர் அதிகமானது. இதனைத் தொடர்ந்து இவர் உணவு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது மட்டுமல்லாமல் தனது திருமணம், மனைவியின் வளைகாப்பு, குடும்ப நிகழ்ச்சிகளையும்  வெளியிட்டு வந்தார்.




இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் டாக்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தனது குழந்தையின் தொப்புள் கொடியையும், ஏதோ துணிக்கடையை ரிப்பன் வெட்டி திறப்பது போல வெட்டியுள்ளார் இர்பான். இதை வீடியோவாகவும் போடவே பெரும் சர்ச்சையானது.


இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான். இந்த விவகாரம் பெரிதாகவே சுகாதாரத்துறை மற்றும் ஊரக மருத்துவ சேவைத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் மருத்துவ கவுன்சிலிலும், போலீஸிலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர் நிவேதிதா ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதேபோல போலீஸ் தரப்பில் இர்பானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


செம்மஞ்சேரி போலீசார் இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, இர்பானிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்