குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

Oct 22, 2024,06:24 PM IST

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்தது தொடர்பான வீடியோவை வெளியிட்ட இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.  


இர்ஃபான்,  இர்ப்பான்ஸ் வியூ சேனலை நடத்தி வருகிறார். இதில் இவர் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது  மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமானவர். இதன் மூலம் இவருக்கு பேன்ஸ் ஃபாலோவர் அதிகமானது. இதனைத் தொடர்ந்து இவர் உணவு வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது மட்டுமல்லாமல் தனது திருமணம், மனைவியின் வளைகாப்பு, குடும்ப நிகழ்ச்சிகளையும்  வெளியிட்டு வந்தார்.




இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை முழுமையாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் டாக்டர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் தனது குழந்தையின் தொப்புள் கொடியையும், ஏதோ துணிக்கடையை ரிப்பன் வெட்டி திறப்பது போல வெட்டியுள்ளார் இர்பான். இதை வீடியோவாகவும் போடவே பெரும் சர்ச்சையானது.


இவருக்கு சர்ச்சைகள் புதிதல்ல. குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்தான். இந்த விவகாரம் பெரிதாகவே சுகாதாரத்துறை மற்றும் ஊரக மருத்துவ சேவைத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் மருத்துவ கவுன்சிலிலும், போலீஸிலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர் நிவேதிதா ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. அதேபோல போலீஸ் தரப்பில் இர்பானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


செம்மஞ்சேரி போலீசார் இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, இர்பானிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்