சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைத் திங்கள் முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவையொட்டி வீடுகள் தோறும் சர்க்கரைப் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்குப் படையல் வைத்து மக்கள் குடும்பத்தோடு சாமி கும்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பொங்கல் விழா என்பது அனைத்து மதத்தினராலும், சாதி சமயப் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். பல ஊர்களில் பல்வேறு மதத்தினர், ஜாதியினர் கூடி சமத்துவப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகள் சார்பிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதேபோல பல்வேறு கிராமங்கள், ஊர்களிலும் விதம் விதமான பொங்கல் விளையாட்டுக்களுடன்மாநிலமே களை கட்டிக் காணப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் சங்கராந்தி விழாவாக இது கொண்டாடப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}