சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைத் திங்கள் முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவையொட்டி வீடுகள் தோறும் சர்க்கரைப் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்குப் படையல் வைத்து மக்கள் குடும்பத்தோடு சாமி கும்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பொங்கல் விழா என்பது அனைத்து மதத்தினராலும், சாதி சமயப் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். பல ஊர்களில் பல்வேறு மதத்தினர், ஜாதியினர் கூடி சமத்துவப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகள் சார்பிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதேபோல பல்வேறு கிராமங்கள், ஊர்களிலும் விதம் விதமான பொங்கல் விளையாட்டுக்களுடன்மாநிலமே களை கட்டிக் காணப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் சங்கராந்தி விழாவாக இது கொண்டாடப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இலங்கையை புரட்டி போட்ட புயல்...பலி எண்ணிக்கை 33 ஆனது
உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தஞ்சையில் கொடுமை.. 13 வருடமாக காதலித்த.. ஆசிரியையை தீர்த்துக் கட்டிய காதலன்!
எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே கடுப்புல இருக்கேன்.. புது வசந்தம் (8)
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தமிழகம் நோக்கி நகரும் புயல்...நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்
லோகேஷ் கனகராஜ்.. 7வது படத்தை இயக்கும் பணியில் தீவிரம்.. அது யாருடைய படம்
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
{{comments.comment}}