பொங்கல் ஸ்பெஷல்: 13, 14 தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Jan 12, 2023,09:11 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. 

பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. 14ம் தேதி போகி கொண்டாடப்படும். 15ம் தேதி தைப் பொங்கல் விழா கொண்டாடப்படும். 16ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.

பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:



ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் இரவு நேர கடைசி ரயில் சேவை  நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக பீக் ஹவர் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இரவு 8 மணி வரை இயக்கப்படும். அந்த சேவையானது இந்த இரு நாட்களுக்கும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜனவரி 18ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை நேர சேவை 5 மணிக்குப் பதில் 4 மணிக்கே தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்