சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் ரொக்கத் தொகை வழங்கப்படாமல்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த செலவினங்களுக்காக 249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவருடன் மேயர் பிரியா, அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இன்று தொடங்கப்படும் பொங்கல் தொகுப்பு விநியோகம் வரும் 13ஆம் தேதி வரை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}