சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் ரொக்கத் தொகை வழங்கப்படாமல்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த செலவினங்களுக்காக 249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவருடன் மேயர் பிரியா, அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இன்று தொடங்கப்படும் பொங்கல் தொகுப்பு விநியோகம் வரும் 13ஆம் தேதி வரை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}